Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
சர்க்கரைவியாதி இருப்பவர்கள் ஏன் வருடத்திற்கு ஒருமுறை சிறு நீரக பரிசோதனை செய்ய வேண்டுமென தெரியுமா?
சிறுநீரகம் இல்லையென்றால் உண்மையில் உங்கள் அருகில் எவரும் நிற்க முடியாது. காரணம் கழிவுகள் உடலிலேயே தங்கி விடும். நாளடைவில் உடல் உறுப்புகள் அழுகிவிடும். சிறுநீரகம் செயலிழப்பதன் அறிகுறிகள் தெரியுமா?
சிறு நீரகம் உங்கள் கழிவுகளை, கொடிய நச்சுக்களை, கிருமிகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. உடலுக்கு தேவையான கால்சியம் சோடியம் ஆகிவற்றை வெளியேற்றாமல் உடலுக்குள் மீண்டும் மறு சுழற்சிக்கு அனுப்புகிறது.

சர்க்கரைவியாதி மற்றும் அதிக உயர் ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகள் இருப்பவர்கள் வருடத்திற்கு ஒருமுறை சிறு நீரகம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களுக்குதான் சிறு நீரகம் பழுதடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

உடல் வீக்கம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு :
யூரியா மற்றும் பல கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றபடவில்லையென்றால், உடலிலேயே தங்கிவிடும். இதனால் அவை திசுக்களில் தங்கி பாதம் மற்றும் உடலில் வீக்கத்தை உண்டாக்கி விடும். உடல் எடையும் அதிகரிக்கும்.

வழக்கத்தை விட சிறு நீர் குறைவாக வெளியேறுதல் :
உடலிலுள்ள திரவம் அடர்த்தி அதிகமாகிவிடுவதால் அவற்றை வெளியேற்றுவது கடினமாகி சிறுநீர் சிறிது சிறிதாக வெளிப்படும்.

சோர்வாக காணப்படுதல் :
சிறு நீரகம் ஹீமோ குளோபின் அளவை சரியாக ஓழுங்குபடுத்தும். ஆனால் சிறு நீரக செயலிழப்பிற்கு பிறகு ரத்த சோகை உண்டாகி, எப்போதும் சோர்வாகவும், தூக்கம் வருவது போலவும் இருக்கும்.

பசியின்மை, குமட்டல் :
உடலில் வளர்சிதை மாற்றமும், ஜீரண மண்டலமும் பாதிக்கப்படுவதால் பசி உண்டாகாது. அதோடு குமட்டலும் உண்டாகும்.

ரத்தக் கொதிப்பு :
சிறு நீரக செயலிழந்த பின் ரத்தக் கொதிப்பை கட்டுக் கொண்டு வைக்க முடியாது. உடலில் ஒரு ஒழுங்கின்மை உண்டாகி, ரத்த கொதிப்பு அதிகமாகிவிடும்.

இதய துடிப்பு :
ரத்த கொதிப்பு அதிகமாகும்போது இதய துடிப்பு அதிகமாகிவிடும். இதயத்திற்கு தேவையான ரத்தம் சரியாக பம்ப் செய்ய திண்றும்போது, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உண்டாகும்.



Click it and Unblock the Notifications