Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சர்க்கரைவியாதி இருப்பவர்கள் ஏன் வருடத்திற்கு ஒருமுறை சிறு நீரக பரிசோதனை செய்ய வேண்டுமென தெரியுமா?
சிறுநீரகம் இல்லையென்றால் உண்மையில் உங்கள் அருகில் எவரும் நிற்க முடியாது. காரணம் கழிவுகள் உடலிலேயே தங்கி விடும். நாளடைவில் உடல் உறுப்புகள் அழுகிவிடும். சிறுநீரகம் செயலிழப்பதன் அறிகுறிகள் தெரியுமா?
சிறு நீரகம் உங்கள் கழிவுகளை, கொடிய நச்சுக்களை, கிருமிகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. உடலுக்கு தேவையான கால்சியம் சோடியம் ஆகிவற்றை வெளியேற்றாமல் உடலுக்குள் மீண்டும் மறு சுழற்சிக்கு அனுப்புகிறது.

சர்க்கரைவியாதி மற்றும் அதிக உயர் ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகள் இருப்பவர்கள் வருடத்திற்கு ஒருமுறை சிறு நீரகம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களுக்குதான் சிறு நீரகம் பழுதடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

உடல் வீக்கம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு :
யூரியா மற்றும் பல கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றபடவில்லையென்றால், உடலிலேயே தங்கிவிடும். இதனால் அவை திசுக்களில் தங்கி பாதம் மற்றும் உடலில் வீக்கத்தை உண்டாக்கி விடும். உடல் எடையும் அதிகரிக்கும்.

வழக்கத்தை விட சிறு நீர் குறைவாக வெளியேறுதல் :
உடலிலுள்ள திரவம் அடர்த்தி அதிகமாகிவிடுவதால் அவற்றை வெளியேற்றுவது கடினமாகி சிறுநீர் சிறிது சிறிதாக வெளிப்படும்.

சோர்வாக காணப்படுதல் :
சிறு நீரகம் ஹீமோ குளோபின் அளவை சரியாக ஓழுங்குபடுத்தும். ஆனால் சிறு நீரக செயலிழப்பிற்கு பிறகு ரத்த சோகை உண்டாகி, எப்போதும் சோர்வாகவும், தூக்கம் வருவது போலவும் இருக்கும்.

பசியின்மை, குமட்டல் :
உடலில் வளர்சிதை மாற்றமும், ஜீரண மண்டலமும் பாதிக்கப்படுவதால் பசி உண்டாகாது. அதோடு குமட்டலும் உண்டாகும்.

ரத்தக் கொதிப்பு :
சிறு நீரக செயலிழந்த பின் ரத்தக் கொதிப்பை கட்டுக் கொண்டு வைக்க முடியாது. உடலில் ஒரு ஒழுங்கின்மை உண்டாகி, ரத்த கொதிப்பு அதிகமாகிவிடும்.

இதய துடிப்பு :
ரத்த கொதிப்பு அதிகமாகும்போது இதய துடிப்பு அதிகமாகிவிடும். இதயத்திற்கு தேவையான ரத்தம் சரியாக பம்ப் செய்ய திண்றும்போது, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உண்டாகும்.



Click it and Unblock the Notifications