Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
சர்க்கரைவியாதி இருப்பவர்கள் ஏன் வருடத்திற்கு ஒருமுறை சிறு நீரக பரிசோதனை செய்ய வேண்டுமென தெரியுமா?
சிறுநீரகம் இல்லையென்றால் உண்மையில் உங்கள் அருகில் எவரும் நிற்க முடியாது. காரணம் கழிவுகள் உடலிலேயே தங்கி விடும். நாளடைவில் உடல் உறுப்புகள் அழுகிவிடும். சிறுநீரகம் செயலிழப்பதன் அறிகுறிகள் தெரியுமா?
சிறு நீரகம் உங்கள் கழிவுகளை, கொடிய நச்சுக்களை, கிருமிகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. உடலுக்கு தேவையான கால்சியம் சோடியம் ஆகிவற்றை வெளியேற்றாமல் உடலுக்குள் மீண்டும் மறு சுழற்சிக்கு அனுப்புகிறது.

சர்க்கரைவியாதி மற்றும் அதிக உயர் ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகள் இருப்பவர்கள் வருடத்திற்கு ஒருமுறை சிறு நீரகம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களுக்குதான் சிறு நீரகம் பழுதடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

உடல் வீக்கம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு :
யூரியா மற்றும் பல கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றபடவில்லையென்றால், உடலிலேயே தங்கிவிடும். இதனால் அவை திசுக்களில் தங்கி பாதம் மற்றும் உடலில் வீக்கத்தை உண்டாக்கி விடும். உடல் எடையும் அதிகரிக்கும்.

வழக்கத்தை விட சிறு நீர் குறைவாக வெளியேறுதல் :
உடலிலுள்ள திரவம் அடர்த்தி அதிகமாகிவிடுவதால் அவற்றை வெளியேற்றுவது கடினமாகி சிறுநீர் சிறிது சிறிதாக வெளிப்படும்.

சோர்வாக காணப்படுதல் :
சிறு நீரகம் ஹீமோ குளோபின் அளவை சரியாக ஓழுங்குபடுத்தும். ஆனால் சிறு நீரக செயலிழப்பிற்கு பிறகு ரத்த சோகை உண்டாகி, எப்போதும் சோர்வாகவும், தூக்கம் வருவது போலவும் இருக்கும்.

பசியின்மை, குமட்டல் :
உடலில் வளர்சிதை மாற்றமும், ஜீரண மண்டலமும் பாதிக்கப்படுவதால் பசி உண்டாகாது. அதோடு குமட்டலும் உண்டாகும்.

ரத்தக் கொதிப்பு :
சிறு நீரக செயலிழந்த பின் ரத்தக் கொதிப்பை கட்டுக் கொண்டு வைக்க முடியாது. உடலில் ஒரு ஒழுங்கின்மை உண்டாகி, ரத்த கொதிப்பு அதிகமாகிவிடும்.

இதய துடிப்பு :
ரத்த கொதிப்பு அதிகமாகும்போது இதய துடிப்பு அதிகமாகிவிடும். இதயத்திற்கு தேவையான ரத்தம் சரியாக பம்ப் செய்ய திண்றும்போது, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உண்டாகும்.



Click it and Unblock the Notifications