Latest Updates
-
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும்
நீரிழிவு நோய் பாதிப்பு இந்தியாதான் நம்பர் 1: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை

34.7 கோடி மக்கள் பாதிப்பு
நீரிழிவு நோய் இன்றைக்கு அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. நீரிழிவின் தொடர்ச்சியாக பல்வேறு நோய்கள் மனிதர்களை பாதிக்கின்றன. உலக நாடுகளில் 347 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியா நம்பர் 1
ஆசிய நாடுகளில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் நீரிழிவு நோயினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
டாப் 5 நாடுகள்
நீரிழிவு நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து நாடுகளில், இந்தியாவில் மட்டும் 50.8 மில்லியன் மக்கள் நீரிழிவினால் அவதிப்படுகின்றனர். சீனாவில் 43.1 மில்லியன் மக்களும், அமெரிக்காவில் 26.8 மில்லியன் மக்களும் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 9.6 மில்லியன் மக்களும், பிரேசில் நாட்டில் 7.6 மில்லியன் மக்களும் நீரிழிவு பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனத்தில் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்
நீரிழிவு நோய் அமைதியாக இருந்து, எவ்வித எச்சரிக்கைகளையும் வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளே அழித்து வருவது. இதை முன்கூட்டியே கண்டறிந்து, உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வந்தால், அந்நோயின் மிகப்பெரிய பாதிப்பிலிருந்து மீண்டுவிடலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
வரும் முன் காக்க வேண்டும்
நீரிழிவு நோய் குறித்த சரியான விழிப்புணர்வு இன்மையினாலேயே பெரும்பாலோனோர் அதிகம் பாதிப்பிற்குள்ளாவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே நீரிழிவு நோயின்றி ஆரோக்கியமாக வாழ உணவுக்கட்டுபாடு மற்றும் உடற்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. மேலும் எந்த நோய் என்றாலும் வந்த பின் அதற்கான மருந்துகளை உட்கொள்வதை விட வரும்முன் பாதுகாப்பதே சிறந்தது.
உடற்பயிற்சியும் உணவும்
நீரிழிவு நோயை மூன்று வழிகளில் கட்டுப்படுத்தலாம். முறையான உணவுக்கட்டுப்பாடு, சரியான உடற்பயிற்சி, நீரிழிவு நோய்க்கான மருந்துகளை சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலையில் எழுந்த உடன் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி அவசியம் மேற்கொள்ளவேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்கவேண்டும். கொழுப்பு குறைவான, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள், பச்சை காய்கறிகள், கீரைகள், நவதானியங்கள், உண்ணவேண்டும் அவ்வப்போது எடையை கண்காணிக்க வேண்டும். ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு இருப்பவர்கள் தொடர்சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications