Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சர்க்கரை வியாதி இருக்கா? மது குடிக்காதீங்க!

நீரிழிவு நோயாளிகள் அதிகம் பாதிப்பப்படுவது கால் நரம்புகளினால்தான். எனவே பாத நரம்புகள் பாதிக்காத அளவிற்கு பாதுகாப்பான நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அவர்கள் தினமும் கால்களை, பாதங்களை நன்கு கவனிக்க வேண்டும். வெடிப்புகள், காயங்கள், கால் ஆணிகள், எந்த பாகமாவது கடினமாக கெட்டியாகி இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டும். காலில் சிறுபுண், ஆணிகள் போன்றவை இருந்தால் சுய சிகிச்சை செய்யாமல் உடனே டாக்டரை அணுகவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கால்களுக்கென்றே சில உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றை அறிவுரைப்படி செய்து வரவும். உடற்பயிற்சிக்கு முன்பும் பின்பும், கால்களை நன்றாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். நடப்பது நல்ல பயிற்சி, தினமும் 1 / 2 மணி அல்லது 1 மணி நேரம், நடக்க வேண்டும். கால்களைத் தினமும் இளஞ் சூடான வெந்நீரில் மென்மை யான சோப் ஒன்றின் உதவியால் கழுவுங்கள்.தூய்மையான துண்டு ஒன்றினால் பாதத்தை, குறிப்பாக விரல் இடுக்குகளை ஈரமின்றித் துடையுங்கள். அழுத்தித் துடைக்காதீர்கள். இதனால் சருமத்தில் விரிவு ஏற்பட்டுத் தொல்லை உண்டாக்கலாம். கால் விரல்களைச் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவிப் பிடித்து விடுங்கள். பாதக்கால்கள் மென்மையாக இருக்கும் படி இலேசாக எண்ணெய் பூசுங்கள்.
நீரிழிவு நோயாளிகள் உபயோகப்படுத்தும் செருப்பில் கவனமாக இருக்க வேண்டும். அவை மென்மையாகவும், அணிவதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். புதிதாக அவைகளை வாங்கி அணிகின்ற போது கவனமாக இருக்க வேண்டும். நகங்களை வெட்ட வேண்டியிருந்தால் ஒட்ட வெட்டாதீர்கள். சிறிதளவு விட்டு வெட்டுங்கள். தசைக்குள் இருக்கும் நகத்தையும், விரல் மூலைகளிலுள்ள நகத்தையும் வெட்டாதீர்கள். கால்களில் சிறிய, மிகச்சிறிய காயம், சிராய்ப்பு ஏற்பட்டாலும் மருத்துவரிடம் தெரிவியுங்கள்.
நீரிழிவு நோயாளிகள் மதுப்பழக்கம், புகைப்பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் அந்த பழக்கத்தை விட்டு விடுவது நல்லது. உடனடியாக விட முடியாதவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று உடலில் ரத்த சர்க்கரை அதிகரிக்காத அளவிற்கு அருந்த வேண்டும். ஏனெனில் உடலின் ரத்த சர்க்கரையின் மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது மது. இதனால் ஹைபோகுளுக்கோமியா என்ற பாதிப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மது அருந்துபவர்கள் அதனுடன் கார்பனேட் அடங்கிய சோடா, குளிர்பானம் கலந்துதான் குடிக்கின்றனர். இதுவும் அபாயகரமானது. எனவே நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications