Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆயுர்வேதத்தின் படி சம்மரில் உடலில் தேங்கும் நச்சுக்களை நீக்க இந்த தேநீரில் ஒன்றை தினமும் குடிங்க போதும்...!
ஆயுர்வேதம் என்பது 5,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய ஒரு பழமையான மருத்துவ முறையாகும். ஆரோக்கியம் மனம், உடல் மற்றும் ஆன்மாக்கு இடையே ஒரு நுட்பமான சமநிலையைச் சார்ந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இது அமைந்துள்ளது. ஆயுர்வேதம் குணப்படுத்துவதற்கும் நோயைத் தடுப்பதற்கும் மூலிகைகள், எண்ணெய்கள் மற்றும் உணவுமுறை உள்ளிட்ட இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது.
நச்சுத்தன்மையானது உடலில் காலப்போக்கில் உருவாகி, சோர்வு, தலைவலி, செரிமானப் பிரச்சனைகள், தோல் பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் மற்றும் இருதய நோய் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் உட்பட பலவிதமான உடல்நலப் பிரச்சனைகளுக்கு காரணமாகும்என்பதால் நச்சு நீக்குதல் மிகவும் முக்கியமானது.

ஆயுர்வேதத்தில்உள்ள நச்சுத்தன்மையை நீக்குதல் என்று வரும்போது அதற்கு பல எளிய மற்றும் சிறந்த வழிகள் உள்ளன. இந்த டிடாக்ஸ் பானங்கள் எளிதில் தயாரிக்கப்படலாம் மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான சிறந்த வீட்டு வைத்தியங்களாக இவை இருக்கிறது. இந்த கோடைகாலத்தில் உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்ற இதில் ஒன்றை தினமும் குடிக்கவும்.
திரிபலா டீ
உடலில் இருந்து நச்சுகளை அகற்ற திரிபலா பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. அம்லா, ஹரிடகி (ஹரட்) மற்றும் பஹேடா தூள் இதில் கலக்கப்படுகிறது. இது நச்சு நீக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது மற்றும் பொதுவாக ஆயுர்வேத மருத்துவத்தில் ஆரோக்கியமான செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் பயன்படுத்தப்படுகிறது.
இதை தயாரிக்க, ஒரு ஸ்பூன் திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் 5-10 நிமிடங்கள் ஊற வைக்கவும். கூடுதல் இனிப்புக்காக நீங்கள் ஒரு தேக்கரண்டி தேனையும் சேர்க்கலாம். இந்த டீயை வெதுவெதுப்பாக இருக்கும் போது குடிக்கவும்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை டீ
இஞ்சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது உடலில் இருந்து விரைவில் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது ஒரு இயற்கையான அழற்சி எதிர்ப்பு ஆகும், இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க அவசியம். இது உடலில் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
இஞ்சி மற்றும் எலுமிச்சை தேநீர் தயாரிக்க, 30 முதல் 40 கிராம் இஞ்சியை அரைக்கவும். அதன் பின் ஒரு கிளாஸ் நீரில், அரைத்த இஞ்சியை போட்டு தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும், அதில் ஒரு எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். இனிப்புக்காக ஒரு ஸ்பூன் தேனை சேர்த்துக் குடிக்கவும்.
மஞ்சள் மற்றும் தேன் கலந்த பால்
மஞ்சள் பொதுவாக உள்ளுறுப்புகளில் வீக்கத்தைப் போக்கப் பயன்படுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மஞ்சளை பால் மற்றும் தேனுடன் கலக்கும்போது, அது ஒரு சுவையான மற்றும் சத்தான ஆயுர்வேத பானமாக மாறுகிறது. மஞ்சள் மற்றும் தேன் பால் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலை சூடாக்கி, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்கவும். நன்றாக கலக்கி வெதுவெதுப்பாகக் குடிக்கவும்.
CCF டீ
சீரகம், கொத்தமல்லி மற்றும் பெருஞ்சீரகம் (CCF) மூலம் உங்கள் செரிமானத்தை மேம்படுத்தலாம். இவை மூன்றும் ஆயுர்வேத மருந்துகளில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த தேநீர் தயாரிக்க, ஒரு தேக்கரண்டி சீரகம், கொத்தமல்லி மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றை 5-10 நிமிடங்கள் சூடான நீரில் கொதிக்க வைக்கவும். அதன்பின் இதனை வடிகட்டி தேன் கலந்து குடிக்கவும்.
கற்றாழை ஜூஸ்
கற்றாழை அதன் குணப்படுத்தும் பண்புகளுக்கு புகழ் பெற்ற தாவரமாகும். இது பல வயிறுக்கோளாறுகளை குணமாக்கும். குறிப்பாக கற்றாழை செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. கற்றாழை சாறு மூலம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கலாம். கற்றாழை சாறு தயாரிக்க, கற்றாழை இலைகளில் இருந்து ஜெல்லை பிரித்தெடுக்க வேண்டும். அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக் குடிக்கவும். இந்த பானத்தின் சுவை கசப்பாக இருப்பதால் அதில் தேன் சேர்த்துக் குடிப்பது நல்ல யோசனையாக இருக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

