Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
பிறந்த நாள் கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி அகால மரணம்... எந்தெந்த உணவுகள் விரைவில் விஷமாக மாறும் தெரியுமா?
பிறந்தநாள் கேக் வெட்டுவது என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத செயல்களில் ஒன்றாகும். ஆனால் அதே கேக் உங்களுக்கு எமனாக மாறினால் என்ன செய்வது? இது கேட்பதற்கு வினோதமாகத் தோன்றினாலும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பஞ்சாபின் பாட்டியாலாவில் ஒரு 10 வயது சிறுமிக்கு இது ஒரு உண்மையாக மாறியுள்ளது.
அந்த சிறுமி பிறந்தநாள் கேக்கை சாப்பிட்ட பிறகு மார்ச் 25 அன்று புட் பாய்சனால் இறந்தார், மேலும் போலீசார் இதுகுறித்து அந்த கேக்கை சப்ளை செய்த பேக்கரி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளபடி, 5 ஆம் வகுப்பு மாணவியான மான்வி மார்ச் 24 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

ஆன்லைன் உணவு விநியோக ஆப் மூலம் அவரது குடும்பத்தினர் கேக்கை ஆர்டர் செய்தனர், மேலும் அவர்கள் இரவு 7 மணியளவில் கேக்கை வெட்டி கொண்டாடிய பிறகு அனைவரும் தூங்க சென்றனர். மான்வியின் பிறந்தநாளை குடும்பத்தினர் கொண்டாடும் வீடியோ அவரது மரணத்திற்குப் பிறகு வைரலாகி வருகிறது.
அறிக்கைகளின்படி, சிறுமி நன்றாக தூங்கினார், மறுநாள் காலையில் அவர் தண்ணீர் கேட்டு விட்டு மீண்டும் தூங்கச் சென்றார். பின்னர், மயங்கிய நிலையில் காணப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு சிறுமி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், கேக்கை சாப்பிட்ட குடும்பத்தில் உள்ள மற்ற ஐவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நிச்சயமாக வெளிப்புற உணவின் சுகாதாரம் மற்றும் தரம் குறித்த அச்சங்களை எழுப்பியிருந்தாலும், சில வெளிப்புற உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும் மற்றும் ஏன் என்று நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த உணவுகள் விஷமாக மாறக்கூடும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கேக் மற்றும் பேஸ்ட்ரிகள்
இந்த பேக்கரி பொருட்களில் உள்ள மோசமான ஆபத்து என்னவென்றால், அவை காலாவதி தேதியுடன் வருவதில்லை, மேலும் அதன் பேஸ் அல்லது ஐசிங் எவ்வளவு பழையது என்பதை தெரிந்து கொள்ள முடியாது. எனவே இதுபோன்ற பொருட்களை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
க்ரீம் ரோல்
இந்த ஸ்வீட்டான உணவு தடிமனான க்ரீம் நிரப்புதலுடன் வருகிறது, இது எந்த காலாவதி தேதியுடனும் வராது, மேலும் மெல்லிய மேலடுக்கு இருப்பதால், இது ஒரு உப்பு சுவை கொண்டது. எனவே அது பழையதாக மாறும்போது, அது இன்னும் புதியதா இல்லையா என்பதை தீர்மானிப்பது மிகவும் தந்திரமானது.
பழச்சாறுகள்
சாலையோரக் கடையாக இருந்தாலும் சரி, உயர்தர கடையாக இருந்தாலும் சரி, சாறு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பழங்கள் மற்றும் பிளெண்டரின் சுகாதார நிலைகளை நீங்கள் நம்ப முடியாது, அதுவே சாறு மூலம் பரவும் நோய் மற்றும் வயிற்று நோய்த்தொற்றுகளுக்கு மூல காரணமாக மாறலாம். இதே விதிகள் மில்க் ஷேக்களுக்கும் பொருந்தும்.
சாண்ட்விட்ச்
நம் கண் முன்னே ப்ரெஷாக தயாரிக்கும் சாண்ட்விட்ச்கள் எப்போதும் நம்பக்கூடியவை. ஆனால் கடைகளில் கிடைக்கும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கிரீமி குளிர் சாண்ட்விச்களுக்கு காலாவதி தேதி இல்லை, இது வயிற்று தொற்று மற்றும் பிற வகையான செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
திறந்தவெளி உணவுப் பொருட்கள்
சாலையோரங்களில் உள்ள பானிபூரி மற்றும் பேல்பூரி போன்ற உணவுகள் பெரும்பாலும் திறந்த வெளியில் விற்கப்படுகின்றன, மேலும் அவை தூசி மற்றும் கிருமிகளால் ஏற்படும் உணவு ஒவ்வாமைகளுக்கு எளிதில் ஆளாகின்றன, இதனால் அவை ஆபத்தானவையாக மாறலாம்.
ஏற்கனவே வெட்டப்பட்ட சாலடுகள்
கண்ணாடி கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் சாலடுகள் கவர்ச்சியாகத் தோன்றலாம், ஆனால் அந்த சாலட்களில் பயன்படுத்தப்படும் அலங்காரப் பொருட்களுக்கு காலாவதி தேதியில்லை, மேலும் அவை வயிற்று வலி மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












