Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
லேக்மீ ஃபேஷன் வீக் 2023: புதுபுது டிசைன்களில் பல வண்ண ஆடைகளில் கவர்ச்சியாக தோற்றமளிக்கும் மாடல்கள்!
இந்த ஃபேஷன் நிகழ்ச்சியில் பெண்களுக்கானது மட்டுமல்ல. பல ஆண்களும் கலந்து கொண்டு சூப்பர் மாடலாக வலம் வந்தனர். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஷேர்ட், பேண்ட் அதற்கேற்ற ஜாக்கெட் அணிந்து மிகவும் ஸ்மார்ட்டாக தோற்றமளித்தனர்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஃபேஷன் நிகழ்வுகளில் ஒன்றான லேக்மீ ஃபேஷன் வீக் நேற்று தொடங்கி மார்ச் 12ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. ஃபேஷன் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த லேக்மீ ஃபேஷன் ஷோவில் பல்வேறு ஆடை வடிவமைப்பாளர்களின் ஆடைகளை திரை பிரபலங்கள் மற்றும் மாடல்கள் அணிந்து ராம்ப் வாக் செய்து வருகிறார்கள். புகழ்பெற்ற பல டிசைனர்களின் ஆடைகள் இந்த நிகழ்ச்சியில் காட்சிபடுத்த இருக்கிறது. பல ஆடை வடிவமைப்பாளர்கள் தங்கள் திறமைகளை இந்த நிகழ்ச்சி மூலம் வெளிக்கொண்டு வருகிறார்கள்.

இன்று இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திரைபிரபலங்கள் மற்றும் மாடல்கள் அணிவந்த ஆடைகள் கவர்ச்சியாகவும் அழகாகவும் அட்டகாசமாகவும் பார்வையாளர்களை கவர்ந்துவருகிறது. இன்று பிரபல பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கை ஷோஸ்டாப்பராக வலம் வந்தார்.
நம் இந்தியாவில் பெரும்பாலும் பெண்கள் புடைவையே அணிந்து வருகிறார்கள். பாரம்பரிய ஆடையான புடவையை தங்கள் கைகளால் வடிவமைத்திருக்கிறார்கள் பல டிசைனர்கள்.மிக தனித்துவமாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்ட புடவைகள் பார்ப்பவர் அனைவரின் கண்களையும் கவரும் வகையில் உள்ளது.
மிகவும் ஸ்டைலாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை கொங்கோனா சென் ஷர்மா, சோனாலி பிந்த்ரே, மந்திரா பேடி, ஷீபா சத்தா, மானசி ஸ்காட், சோனாலி குல்கர்னி, அஷ்வினி ஐயர், ராஜ்ஸ்ரீ தேஸ்பாண்டே, மோனிகா டோக்ரா, சோனா மொஹபத்ரா மற்றும் கௌரி ஷிண்டே ஆகியோர் அணிந்து ராம்ப் வாக் செய்தனர். நம் பாரம்பரிய ஆடை அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தது.
அதைத்தொடர்ந்து பல டிசைனர்கள் வடிவமைத்த ஆடையை பல மாடல்கள் அணிந்து ராம்ப் வாக் செய்தனர். ஒவ்வொரு ஆடையும் அதன் தனித்துவத்தை கொண்டிருந்தது. புதுபுது டிசைனில் வடிவமைக்கப்பட்ட ஆடை மிக அழகாக அனைவரின் கண்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த ஃபேஷன் நிகழ்ச்சியில் பெண்களுக்கானது மட்டுமல்ல. பல ஆண்களும் கலந்து கொண்டு சூப்பர் மாடலாக வலம் வந்தனர். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஷேர்ட், பேண்ட் அதற்கேற்ற ஜாக்கெட் அணிந்து மிகவும் ஸ்மார்ட்டாக தோற்றமளித்தனர்.
நடிகர் அர்ஜுன் கபூர் கருப்பு நிற பேன்ட், சாம்பல் நிற டி-சர்ட் அணிந்திருந்தார். அதன் மீது ஒரு கருப்பு ஜாக்கெட் அணிந்து மிக அழகாக தோற்றமளித்தார். மேலும் கருப்பு நிற கண்ணாடி கிளாஸ் அணிந்து அனைத்து பெண்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
ஜிகுஜிகு என்று கவர்ச்சியாக தோற்றமளிக்க கூடிய ஆடைகளை அணிந்து அனைவரின் பார்வையும் தன்னை நோக்கி இழுத்துள்ளார். ஜிகினா போல ஜொலிக்கும் ஆடை மாடலுக்கு நேர்த்தியாக பொருந்தி இருந்தது.
எங்கும் காணத அற்புதமான வடிவங்களில் வடிமைக்கப்பட்ட ஆடைகளை இந்த லேக்மீ ஃபேஷன் வீக்கில் நீங்கள் காணலாம். மாடல்கள் தங்கள் அணிந்து வந்த ஆடைகளுக்கு ஏற்ப அணிகலன் மற்றும் காலணிகளை நேர்த்தியாக தேர்வு செய்து அணிந்து வந்தனர்.



Click it and Unblock the Notifications


















