Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
வெள்ளையாக ட்ரை பண்றீங்களா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்குகளை தினமும் போடுங்க...
Summer Skin Care Tips In Tamil: கோடைக்காலத்தில் அதிக வெயிலின் தாக்கத்தினால், சருமம் விரைவில் கருமையாகும். வெளியே வெயிலில் தினமும் சுற்றுபவர்கள் கோடைக்காலத்தில் சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களைக் கொடுக்காமல் இருந்தால், சரும செல்கள் அதிகம் சேதமடைந்துவிடும். கோடைக்காலத்தில் நீங்கள் கருப்பாக மாறாமல் இருக்க விரும்பினால், பாலைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளை போடுங்கள்.
பாலில் லாக்டிக் அமிலம், கால்சியம், வைட்டமின் பி12, வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, வைட்டமின் டி2 மற்றும் புரோட்டீன் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் சரும செல்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை மற்றும் இவை சரும செல்கள் புத்துணர்ச்சி அடையச் செய்வதோடு, சேதமடைந்த சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கிறது மற்றும் சரும நெகிழ்வுத்தன்மை மற்றும் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இப்போது சரும நிறத்தை அதிகரிக்க உதவும் சில பால் ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.

ஃபேஸ் பேக் #1
* ஒரு பௌலில் கடலை மாவு அல்லது முல்தானி மெட்டி பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு முகத்தை நீரில் கழுவி, துடைத்துவிட்டு, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.
ஃபேஸ் பேக் #2
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, சருமத்தை பளிச்சென்று மாற்றும்.
ஃபேஸ் பேக் #3
* இரவு தூங்கும் முன் சிறிது பாதாமை காய்ச்சாத பாலில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* பின் மறுநாள் காலையில் அதை அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை அதிகரிக்க பெரிதும் உதவி புரியும்.
ஃபேஸ் பேக் #4
* நன்கு கனிந்த அவகேடோ பழத்தை சிறிது ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலை சேர்த்து நன்கு கலந்து, அந்த கலவையை கழுத்து மற்றும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #5
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது காய்ச்சாத பாலை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, சருமத்தை பிரகாசமாக ஜொலிக்க வைக்கும்.



Click it and Unblock the Notifications