Latest Updates
-
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்!
5 நாட்களில் கருவளையம் போகணுமா? அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...
கண்களைச் சுற்றியுள்ள கருமையான வளையங்கள் பலருக்கும் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். ஏனெனில் இது ஒருவரது தோற்றத்தையே பாழாக்கும். உங்களால் ஐந்து நாட்களில் கருவளையங்களை நீக்க முடியுமா?
உங்களால் ஐந்து நாட்களில் கருவளையங்களை நீக்க முடியுமா? நிச்சயம் பலரும் இது சாத்தியம் இல்லை என்று நினைப்பீர்கள். ஆனால் அது தான் இல்லை. இந்த கட்டுரையில் கருவளையங்களை 5 நாட்களில் எப்படி நீக்குவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. கண்களைச் சுற்றியுள்ள கருமையான வளையங்கள் பலருக்கும் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். ஏனெனில் இது ஒருவரது தோற்றத்தையே பாழாக்கும். ஒருவருக்கு கருவளையங்கள் இருந்தால், அது அவரை சோம்பேறியாக மற்றவருக்கு வெளிக்காட்டும்.

கருவளையங்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதுமை, பரம்பரை, வறட்சியான சருமம், தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற டயட், நீண்ட நேர அழுகை, கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை செய்வது, கண்களுக்கு அழுத்தம் கொடுக்கும் செயல்களை அதிகமாக செய்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்போது கருவளையங்களை 5 நாட்களில் போக்க உதவும் சில எளிய வழிகளைக் காண்போம்.

வழி #1
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை கண்களைச் சுற்றி தடவ வேண்டும். வேண்டுமானால், இத்துடன் 1 டீஸ்பூன் ப்ளாக் டீ சேர்த்து கொள்ளலாம். 20 நிமிடம் நன்கு ஊறியதும், நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் கண்களைச் சுற்றி துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், 5 நாட்களில் கருவளையங்கள் காணாமல் போகும்.

வழி #2
தினமும் இரவு தூங்கும் முன் பாதாம் எண்ணெயைக் கொண்டு கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினந்தோறும் செய்யும் போது, நாளுக்கு நாள் கருவளையங்கள் மெதுவாக மறைய ஆரம்பிப்பதை நீங்களே காண்பீர்கள்.

வழி #3
ரோஸ் வாட்டரில் உள்ள குளிர்ச்சி பண்புகள், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கி, கண்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். அதற்கு ரோஸ் வாட்டரை பஞ்சுருண்டையில் நனைத்து, கண்களை மூடி கண்களின் மேல் வைத்து, 15 நிமிடம் அப்படியே உட்கார வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் மாயமாய் மறையும்.

வழி #4
சில டீ பேக்குகளை ஃப்ரிட்ஜில் வைத்து, சிறிது நேரம் கழித்து அவற்றை வெளியே எடுத்து, கண்களின் மேல் 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், கருவளையங்கள் குறைவதோடு, அதில் உள்ள குளிர்ச்சி பண்புகள் மற்றும் காப்ஃபைன், கண்களைச் சுற்றியுள்ள சருமத் துளைகளுக்கு இதத்தை அளிக்கும்.

வழி #5
எலுமிச்சையில் ப்ளீச்சிங் பண்புகள் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இத்தகைய எலுமிச்சையின் சாற்றுடன் சிறிது நீர் சேர்த்து, அதை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, கண்களை மூடி கண்களின் மேல் வைத்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை என ஓரிரு நாட்கள் செய்தால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை மறைவதைக் காணலாம்.

வழி #6
ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு கண்களைச் சுற்றி மசாஜ் செய்தால், அதில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் நொதிகள், கண்களைச் சுற்றி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கருவளையங்களை மறையச் செய்யும். சிறப்பான பலன் கிடைக்க, தினமும் இரண்டு முறை செய்யுங்கள்.

வழி #7
தேனில் ஆன்டி-ஏஜிங் பண்புகள் உள்ளது. இது சருமத்திற்கு பொலிவையும், இளமைத் தோற்றத்தையும் கொடுக்கும். அதற்கு தேனை தினமும் கண்களைச் சுற்றி சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை மசாஜ் செய்யுங்கள். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க வேண்டுமானால், இரவு தூங்கும் முன் தேனை கண்களைச் சுற்றி தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுங்கள்.



Click it and Unblock the Notifications