Latest Updates
-
தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு பல தலைவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வது ஏன்? -
18 ஆண்டுக்கு பின் மகம் நட்சத்திரம் செல்லும் கேதுபகவான்: இந்த 3 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்... -
பெங்காலி தக்காளி சட்னி ரெசிபி... ஒரு தடவை அரைச்சு பாருங்க... இனிப்பா, காரமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க... -
குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 4 ராசிகாரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கூடிவரப்போகுதாம்...! -
இளநீர் Vs நெல்லிக்காய் ஜூஸ் - இவற்றில் கோடையில் குடிக்க சிறந்தது எது? -
Tamil Nadu Election 2026: தமிழ்நாடு அரசிலுடன் தொடர்புடைய புகழ்பெற்ற தமிழ்நாட்டு கோவில்கள் என்னென்ன தெரியுமா? -
12 ஆண்டுகள் கழித்து உச்ச வீட்டில் நுழையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு ராஜயோகம் அடிக்கப்போகுது.. -
சுரைக்காய் வாங்குனா வேர்க்கடலையுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க... செம சைடிஷா இருக்கும்...! -
1 கப் தயிரும், 2 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. செம டேஸ்ட்டா இருக்கும்..
ஆண்களின் அழகை அதிகரிக்கும் சில எளிய ஃபேஸ் பேக்குகள்!
இங்கு ஆண்களின் அழகை அதிகரிக்கும் சில எளிய ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பெண்கள் மட்டும் தான் அழகாக இருக்க ஃபேஸ் பேக்குகள், ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆண்களும் தங்கள் அழகை அதிகரிப்பதற்கும், இளமையாக காட்சியளிக்கவும் ஃபேஸ் பேக்குகளைக் கட்டாயம் பயன்படுத்தலாம். சொல்லப்போனால் பெண்களை விட ஆண்கள் சரும பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுவார்கள். ஆனால் என்ன அவர்கள் அதை வெளிப்படையாக மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்.

பெண்களின் சருமத்தை விட ஆண்களின் சருமம் சற்று கடினமாக இருக்கும். அதேப் போல் ஆண்கள் அதிகம் சுற்றுவதால், அவர்களின் சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் மற்றும் அழுக்குகள் அதிகம் இருக்கும். இதை ஆண்கள் ஆரம்பத்திலேயே சரியான பராமரிப்பு கொடுத்து சருமத்தை சுத்தம் செய்து வந்தால், சருமம் கருமையாக காணப்படுவதைத் தவிர்க்கலாம்.
ஆண்களுக்கு எந்த சருமத்தினர் எம்மாதிரியான ஃபேஸ் பேக்குகளைப் போட வேண்டும் என தெரியாது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை எந்த வகை சருமத்தினர் எந்த மாதிரியான ஃபேஸ் பேக்கைப் போட வேண்டுமென தெளிவாக கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றினால், ஆண்கள் நிச்சயம் தாங்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கருமையைப் போக்கும் தயிர் மற்றும் மஞ்சள்
ஆண்கள் அதிகம் சன் ஸ்கிரீன் பயன்படுத்தமாட்டார்கள். எனவே அவர்களது சருமம் எளிதில் கருமையாகிவிடும். ஆனால் இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கும். அதற்கு ஒரு டீஸ்பூன் தயிருடன் 3 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கருமையாக இருக்கும் கை, கால்களிலும் தடவவும். பின் 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரில் கழுவ வேண்டும்.

வறட்சியைப் போக்கும் ஓட்ஸ் மற்றும் மில்க் க்ரீம்
நிறைய ஆண்கள் சரும வறட்சியால் அவஸ்தைப்படுவார்கள். சருமம் அதிகம் வறட்சியடையும் போது, அசிங்கமா தோல் உரிந்து காணப்படும். அதனைப் போக்க ஓட்ஸ் மற்றும் மில்க் க்ரீம் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள். அதுவும் சிறிது மில்க் க்ரீம் உடன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

பருக்களைப் போக்கும் வேப்பிலை
பெண்களைப் போன்றே ஆண்களும் முகப்பருவால் அதிகம் கஷ்டப்படுவார்கள். இதற்கு வேப்பிலை நல்ல பலனைத் தரும். வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், பருக்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, பருக்களைப் போக்கும். அதற்கு 1 டீஸ்பூன் வேப்பிலை பொடியுடன், சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்தால் பருக்கள் காணாமல் போகும்.

முகப் பொலிவை அதிகரிக்கும் துளசி மற்றும் புதினா
இந்த புதினா ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள பருக்களைப் போக்குவதோடு, பொலிவிழந்து காணப்படும் முகத்தை பொலிவோடும் பிரகாசமாகவும் மாற்றும். இது ஆண்களுக்கான மிகச்சிறந்த ஃபேஸ் பேக். அதற்கு சிறிது துளசி மற்றும் புதினா பவுரை எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளலாம் அல்லது சிறிது துளசி மற்றும் புதினா இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளலாம். பின் அதை முபத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

சென்சிடிவ் சருமத்தினருக்கு தேன் மற்றும் ஆரஞ்சு
ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் உடன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது. இதனால் சரும நிறம் அதிகரித்துக் காணப்படும்.

கடலை மாவு பேக்
பெண்கள் மட்டும் தான் கடலை மாவைப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆண்களும் கட்டாயம் பயன்படுத்தலாம். இது அனைவருக்கு முகப் பொலிவை அதிகரிக்க உதவும். முக்கியமாக இது கரும்புள்ளிகளைப் போக்கும். அதற்கு 1 டீஸ்பூன் கடவை மாவுடன், 3 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு 20 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

தயிர் மற்றும் அரிசி மாவு பேக்
இந்த ஃபேஸ் பேக் சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களின் தேக்கத்தை வெளியேற்ற உதவும். இது அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. அதற்கு அரிசி மாவை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி தேய்த்துக் கழுவ வேண்டும். இதனால் சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.



Click it and Unblock the Notifications











