Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Milagai Killi Potta Sambar Recipe In Tamil: வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் வேளையில் மதிய வேளையில் டக்கென்று சமையலை முடித்துவிட்டு, சமையலறையில் இருந்து வெளிவரவே பலரும் நினைப்போம். நீங்களும் அப்படி தான் நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் சமையலை வேகமாக முடிக்கக்கூடிய ஒரு அருமையான சாம்பார் ரெசிபி உள்ளது. அது தான் மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார்.

இந்த சாம்பார் 10 நிமிடத்தில் டக்கென்று செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு சுலபமாக இருக்கும். முக்கியமாக இந்த சாம்பாரை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். அதுவும் இந்த சாம்பாரை செய்து, காரசாரமான சிக்கன் ப்ரை அல்லது உருளைக்கிழங்கு ப்ரை செய்தாலே, சுவை பிரமாதமாக இருக்கும்.
இந்த மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் ரெசிபி குறித்து காதத்துவக்குல சமையல் என்னும் இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகாய் கிள்ளிப் கோட்ட சாம்பார் ரெசிபியின் எளிய செய்மு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 4 கப்
* தக்காளி - 3
* சின்ன வெங்காயம் - 10
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 5
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் 1 நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து வெதுவெதுப்பான நீரில்
10 நிமிடம் ஊற வைத்து, பிசைந்து வடிகட்டி சாறு எடுத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் கழுவிய துவரம் பருப்பை குக்கரில் சேர்த்து, அத்துடன் 4
கப் தண்ணீர், 10 சின்ன வெங்காயம், 3 நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள்,
சீரகம் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாயை கிள்ளி சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கண்ணாடி பதத்திற்கு வெங்காயம்
வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, புளிச்சாற்றினை
ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி கிளறி, 1 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து
இறக்கினால், மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications