Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Milagai Killi Potta Sambar Recipe In Tamil: வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் வேளையில் மதிய வேளையில் டக்கென்று சமையலை முடித்துவிட்டு, சமையலறையில் இருந்து வெளிவரவே பலரும் நினைப்போம். நீங்களும் அப்படி தான் நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் சமையலை வேகமாக முடிக்கக்கூடிய ஒரு அருமையான சாம்பார் ரெசிபி உள்ளது. அது தான் மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார்.

இந்த சாம்பார் 10 நிமிடத்தில் டக்கென்று செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு சுலபமாக இருக்கும். முக்கியமாக இந்த சாம்பாரை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். அதுவும் இந்த சாம்பாரை செய்து, காரசாரமான சிக்கன் ப்ரை அல்லது உருளைக்கிழங்கு ப்ரை செய்தாலே, சுவை பிரமாதமாக இருக்கும்.
இந்த மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் ரெசிபி குறித்து காதத்துவக்குல சமையல் என்னும் இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகாய் கிள்ளிப் கோட்ட சாம்பார் ரெசிபியின் எளிய செய்மு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 4 கப்
* தக்காளி - 3
* சின்ன வெங்காயம் - 10
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 5
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் 1 நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து வெதுவெதுப்பான நீரில்
10 நிமிடம் ஊற வைத்து, பிசைந்து வடிகட்டி சாறு எடுத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் கழுவிய துவரம் பருப்பை குக்கரில் சேர்த்து, அத்துடன் 4
கப் தண்ணீர், 10 சின்ன வெங்காயம், 3 நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள்,
சீரகம் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாயை கிள்ளி சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கண்ணாடி பதத்திற்கு வெங்காயம்
வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, புளிச்சாற்றினை
ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி கிளறி, 1 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து
இறக்கினால், மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications