Latest Updates
-
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
மஞ்சள் கொண்டு எப்படி உங்கள் சரும அழகை அதிகரிக்கச் செய்யலாம் என குறிப்புகள்!
மஞ்சள் கொண்டு எப்படி சரும அழகை அதிகப்படுத்தலாமெ ந இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் ஆதி காலத்திலிருந்து நம் தமிழ் நாட்டில் ஊறிய ஒரு பொருள். சமையலாகட்டும், அழகிற்காகட்டும். அதனை ராணி என்றே அழைக்கலாம். மஞ்சளை அரைத்துப் பூசக் கூடத் தேவையில்லை, மஞ்சள் கலந்த நீராவியும் அழகை அதிகரிக்கச் செய்யும்.
அத்தகைய பழம் பெருமை வாய்ந்த மஞ்சள் நமது அழகை அதிகபப்டுத்த ஈடில்லா நன்மைகளை தருகிறது. மஞ்சள் கொண்டு எப்படி முகத்திலுள்ள சுருக்கங்கள், கருமை போன்ற சரும பிரச்சனைகளை குணப்படுத்தலாம் என பார்க்கலாம்.

சுருக்கம் மறைய :
புதிதான மஞ்சள் கிழங்கை அதன் இலையோடு சேர்த்து பாசிப்பயிறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் சுருக்கம் நீங்கும்.

பூனை முடிகள் உதிர :
மஞ்சள் இலை மற்றும் குப்பைமேனி இலை இரண்டையும் அரைத்து குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை தினமும் செய்தால் பூனை முடிகள் உதிரும்.

முகப்பரு மறைய :
மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர் நீரில் கழுவினால் முகப்பருவில் சீழ் பிடிக்காது.

மென்மையான சருமம் கிடைக்க :
முகத்தோல் சொரசொரப்பாக இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வரவும்.

முகம் பளிச்சிட :
மஞ்சள் கிழங்கு ஒன்றுடன் ஒரு எலுமிச்சை இலையை சேர்த்தரைத்துப் பூசினால் முகம் பளிச்சென்று மாறும்.

நிறம் அதிகரிக்க :
குண்டு மஞ்சள் கிழங்கு, கெட்டிக் கிழங்கு முக அழகை கூட்டி அதிக நிறம் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications