மஞ்சள் கொண்டு எப்படி உங்கள் சரும அழகை அதிகரிக்கச் செய்யலாம் என குறிப்புகள்!

மஞ்சள் கொண்டு எப்படி சரும அழகை அதிகப்படுத்தலாமெ ந இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் ஆதி காலத்திலிருந்து நம் தமிழ் நாட்டில் ஊறிய ஒரு பொருள். சமையலாகட்டும், அழகிற்காகட்டும். அதனை ராணி என்றே அழைக்கலாம். மஞ்சளை அரைத்துப் பூசக் கூடத் தேவையில்லை, மஞ்சள் கலந்த நீராவியும் அழகை அதிகரிக்கச் செய்யும்.

அத்தகைய பழம் பெருமை வாய்ந்த மஞ்சள் நமது அழகை அதிகபப்டுத்த ஈடில்லா நன்மைகளை தருகிறது. மஞ்சள் கொண்டு எப்படி முகத்திலுள்ள சுருக்கங்கள், கருமை போன்ற சரும பிரச்சனைகளை குணப்படுத்தலாம் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுருக்கம் மறைய :

சுருக்கம் மறைய :

புதிதான மஞ்சள் கிழங்கை அதன் இலையோடு சேர்த்து பாசிப்பயிறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் சுருக்கம் நீங்கும்.

பூனை முடிகள் உதிர :

பூனை முடிகள் உதிர :

மஞ்ச‌ள் இலை மற்றும் குப்பைமேனி இலை இர‌ண்டையு‌ம் அரைத்து குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை தினமும் செய்தால் பூனை முடிகள் உதிரும்.

முகப்பரு மறைய :

முகப்பரு மறைய :

மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர் நீரில் கழுவினால் முகப்பருவில் ‌சீ‌ழ் பிடிக்காது.

 மென்மையான சருமம் கிடைக்க :

மென்மையான சருமம் கிடைக்க :

முகத்தோல் சொரசொரப்பாக இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வரவும்.

முகம் பளிச்சிட :

முகம் பளிச்சிட :

மஞ்சள் கிழங்கு ஒன்றுடன் ஒரு எலுமிச்சை இலையை சேர்த்தரைத்துப் பூசினால் முகம் பளிச்செ‌ன்று மாறு‌ம்.

நிறம் அதிகரிக்க :

நிறம் அதிகரிக்க :

குண்டு மஞ்சள் கிழங்கு, கெட்டி‌க் கிழங்கு முக அழகை கூட்டி அதிக நிறம் கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, April 7, 2017, 8:20 [IST]
Desktop Bottom Promotion