Latest Updates
-
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
மஞ்சள் கொண்டு எப்படி உங்கள் சரும அழகை அதிகரிக்கச் செய்யலாம் என குறிப்புகள்!
மஞ்சள் கொண்டு எப்படி சரும அழகை அதிகப்படுத்தலாமெ ந இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் ஆதி காலத்திலிருந்து நம் தமிழ் நாட்டில் ஊறிய ஒரு பொருள். சமையலாகட்டும், அழகிற்காகட்டும். அதனை ராணி என்றே அழைக்கலாம். மஞ்சளை அரைத்துப் பூசக் கூடத் தேவையில்லை, மஞ்சள் கலந்த நீராவியும் அழகை அதிகரிக்கச் செய்யும்.
அத்தகைய பழம் பெருமை வாய்ந்த மஞ்சள் நமது அழகை அதிகபப்டுத்த ஈடில்லா நன்மைகளை தருகிறது. மஞ்சள் கொண்டு எப்படி முகத்திலுள்ள சுருக்கங்கள், கருமை போன்ற சரும பிரச்சனைகளை குணப்படுத்தலாம் என பார்க்கலாம்.

சுருக்கம் மறைய :
புதிதான மஞ்சள் கிழங்கை அதன் இலையோடு சேர்த்து பாசிப்பயிறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் சுருக்கம் நீங்கும்.

பூனை முடிகள் உதிர :
மஞ்சள் இலை மற்றும் குப்பைமேனி இலை இரண்டையும் அரைத்து குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை தினமும் செய்தால் பூனை முடிகள் உதிரும்.

முகப்பரு மறைய :
மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர் நீரில் கழுவினால் முகப்பருவில் சீழ் பிடிக்காது.

மென்மையான சருமம் கிடைக்க :
முகத்தோல் சொரசொரப்பாக இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வரவும்.

முகம் பளிச்சிட :
மஞ்சள் கிழங்கு ஒன்றுடன் ஒரு எலுமிச்சை இலையை சேர்த்தரைத்துப் பூசினால் முகம் பளிச்சென்று மாறும்.

நிறம் அதிகரிக்க :
குண்டு மஞ்சள் கிழங்கு, கெட்டிக் கிழங்கு முக அழகை கூட்டி அதிக நிறம் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications