Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
சருமத்தை பாதுகாக்கும் குளிர்கால குறிப்புகள் தெரிந்து கொள்ள வேண்டுமா?
குளிர்காலத்தில் சருமம் மற்ற பருவங்களைக் காட்டிலும் பாதிக்கப்படுவது உண்மைதான். குளிர்காற்றினால் சருமம் வறண்டுவிடும்.
தோலில் போதுமான அளவு ஈரப்பதம் இல்லாததால், உங்களுடைய முகம் மற்றும் உடல் பகுதிகளில் அரிப்புகள் ஏற்படும். சுருக்கங்கள் எரிச்சல் உண்டாகும். முகத் தசைகள் மிகவும் இறுக்கமாக காணப்படும்.
ஏனென்றால் குளிர்ச்சியான காற்று சருமத்தில் உள்ள ஈரப்பசையை முற்றிலும் உறிஞ்சிக் கொள்ளும். இதனால் சருமத்தில் ஈரத்தன்மை குரைந்து வறண்டு போய் விடுகிறது.

ஆகவே குளிர்காலத்தில் சருமத்தை முறையாக பராமரிப்பது அவசியமாகிறது. சரியாக பராமரிக்காவிட்டால், சருமத்தில் வெடிப்புகள் மற்றும் வெள்ளைத் திட்டுக்கள் உண்டாகிவிடும்.
நம் உடல் உறுப்புக்களை பாதுகாக்கும் கவசமாக இருக்கும் சருமத்தை எப்படி குளிர்காலத்திலிருந்து மீட்டெடுக்கலாம் என பார்க்கலாம்.
அவகாடோ :
அவகேடோ குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய பழம். ஆகவே அந்த பழத்தை அரைத்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் ஈரப்பசையானது நீங்காமல் இருக்கும்.
தேன் மற்றும் பால் :
தேங்காய் எண்ணெய் , பால் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
முட்டையின் வெள்ளைக் கரு :
முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அதில் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் வறட்சியின்றி, மென்மையாகவும், சுருக்கங்களின்றியும் இருக்கும்.
வாழைப்பழம் மற்றும் தயிர் :
வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதில் சிறிது தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.
பப்பாளி மற்றும் பால் :
பப்பாளியை மசித்து, அதில் சிறிது பால் சேர்த்து கலந்து, 10 நிமிடம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இத்தகைய ஃபேஸ் பேக்குகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.



Click it and Unblock the Notifications















