Latest Updates
-
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
டெங்குவில் இருந்து சீக்கிரம் குணமாகணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலை சமாளிக்க இந்த 5 செடிகள் போதும்… வீடே குளிர்ச்சியாகவும் செல்வமும் தானாக பெருகும்! -
நீட் மறுதேர்வு எப்போது? சிபிஐ அதிரடி கைதுக்கு பின் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
முகப்பரு வர ஆரம்பிச்சுடுச்சா? உடனே சமையலறைக்கு போங்க...
கோடைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில், உங்கள் உடலில் வெப்பம் அதிகமாகும். இதனால் முகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் முக்கியமாக பருக்கள் தான் முகத்தின் அழகையே கெடுக்கும். இப்படி அழகைக் கெடுக்கும் பருக்களை போக்க பலரும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் பருக்கள் தான் அதிகமாகுமே தவிர, குறையாது.
ஆகவே கோடையில் முகத்தில் பருக்கள் வராமல் இருக்கவும், வந்த பருக்களை சீக்கிரம் போக்கவும், கடைக்கு சென்று க்ரீம்களை வாங்காமல், சமையலறைக்கு செல்லுங்கள். ஏனெனில் சமையலறையில் உள்ள சில பொருட்கள் முகப்பருக்களை எளிதில் விரட்டக்கூடியவை. இங்கு அப்படி முகப்பருக்களை எளிதில் விரட்டும் சமையலறைப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து, அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவுங்கள்.

கற்றாழை ஜெல்
மருத்துவ குணம் அதிகம் நிறைந்த கற்றாழை ஜெல்லில் பருக்கள் போக்கும் தன்மையும் அதிகம் உள்ளது. அதற்கு தினமும் முகத்தில் கற்றாழை ஜெல்லைத் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வாருங்கள்.

வேப்பிலை
வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் இருப்பதால், இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகள் அனைத்தும் பறந்து ஓடிவிடும். அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

தேன்
தேனில் ஆன்டி-செப்டிக் மற்றும் ஈரப்பசையூட்டும் பொருள் உள்ளது. எனவே இதனை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த செயலால் சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமத்துளைகள் சுத்தமாகி அடைக்கப்படும்.

ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே இதன் தோலை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் பருக்கள் மறையும்.

திராட்சை
திராட்சையை எடுத்து இரண்டாக வெட்டி, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, 10-15 நிமிடம் உற வைத்து பின் கழுவ வேண்டும். இதன் மூலமும் பருக்களைப் போக்கலாம்.



Click it and Unblock the Notifications