Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
முகப்பரு வர ஆரம்பிச்சுடுச்சா? உடனே சமையலறைக்கு போங்க...
கோடைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில், உங்கள் உடலில் வெப்பம் அதிகமாகும். இதனால் முகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் முக்கியமாக பருக்கள் தான் முகத்தின் அழகையே கெடுக்கும். இப்படி அழகைக் கெடுக்கும் பருக்களை போக்க பலரும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் பருக்கள் தான் அதிகமாகுமே தவிர, குறையாது.
ஆகவே கோடையில் முகத்தில் பருக்கள் வராமல் இருக்கவும், வந்த பருக்களை சீக்கிரம் போக்கவும், கடைக்கு சென்று க்ரீம்களை வாங்காமல், சமையலறைக்கு செல்லுங்கள். ஏனெனில் சமையலறையில் உள்ள சில பொருட்கள் முகப்பருக்களை எளிதில் விரட்டக்கூடியவை. இங்கு அப்படி முகப்பருக்களை எளிதில் விரட்டும் சமையலறைப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து, அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவுங்கள்.

கற்றாழை ஜெல்
மருத்துவ குணம் அதிகம் நிறைந்த கற்றாழை ஜெல்லில் பருக்கள் போக்கும் தன்மையும் அதிகம் உள்ளது. அதற்கு தினமும் முகத்தில் கற்றாழை ஜெல்லைத் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வாருங்கள்.

வேப்பிலை
வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் இருப்பதால், இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகள் அனைத்தும் பறந்து ஓடிவிடும். அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

தேன்
தேனில் ஆன்டி-செப்டிக் மற்றும் ஈரப்பசையூட்டும் பொருள் உள்ளது. எனவே இதனை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த செயலால் சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமத்துளைகள் சுத்தமாகி அடைக்கப்படும்.

ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே இதன் தோலை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் பருக்கள் மறையும்.

திராட்சை
திராட்சையை எடுத்து இரண்டாக வெட்டி, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, 10-15 நிமிடம் உற வைத்து பின் கழுவ வேண்டும். இதன் மூலமும் பருக்களைப் போக்கலாம்.



Click it and Unblock the Notifications