Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
முகப்பரு வர ஆரம்பிச்சுடுச்சா? உடனே சமையலறைக்கு போங்க...
கோடைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில், உங்கள் உடலில் வெப்பம் அதிகமாகும். இதனால் முகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் முக்கியமாக பருக்கள் தான் முகத்தின் அழகையே கெடுக்கும். இப்படி அழகைக் கெடுக்கும் பருக்களை போக்க பலரும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் பருக்கள் தான் அதிகமாகுமே தவிர, குறையாது.
ஆகவே கோடையில் முகத்தில் பருக்கள் வராமல் இருக்கவும், வந்த பருக்களை சீக்கிரம் போக்கவும், கடைக்கு சென்று க்ரீம்களை வாங்காமல், சமையலறைக்கு செல்லுங்கள். ஏனெனில் சமையலறையில் உள்ள சில பொருட்கள் முகப்பருக்களை எளிதில் விரட்டக்கூடியவை. இங்கு அப்படி முகப்பருக்களை எளிதில் விரட்டும் சமையலறைப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து, அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவுங்கள்.

கற்றாழை ஜெல்
மருத்துவ குணம் அதிகம் நிறைந்த கற்றாழை ஜெல்லில் பருக்கள் போக்கும் தன்மையும் அதிகம் உள்ளது. அதற்கு தினமும் முகத்தில் கற்றாழை ஜெல்லைத் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வாருங்கள்.

வேப்பிலை
வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் இருப்பதால், இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகள் அனைத்தும் பறந்து ஓடிவிடும். அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

தேன்
தேனில் ஆன்டி-செப்டிக் மற்றும் ஈரப்பசையூட்டும் பொருள் உள்ளது. எனவே இதனை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த செயலால் சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமத்துளைகள் சுத்தமாகி அடைக்கப்படும்.

ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே இதன் தோலை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் பருக்கள் மறையும்.

திராட்சை
திராட்சையை எடுத்து இரண்டாக வெட்டி, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, 10-15 நிமிடம் உற வைத்து பின் கழுவ வேண்டும். இதன் மூலமும் பருக்களைப் போக்கலாம்.



Click it and Unblock the Notifications