Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
கோடையில் பிம்பிள் வருவதைத் தடுக்க சில சிம்பிளான டிப்ஸ்...
கோடை வந்தாலே உங்கள் முகத்தில் வலியைத் தரக்கூடிய முகப்பருக்கள் வந்து தொல்லையைத் தருகிறதா? என்ன செய்வதென்றே தெரியவில்லையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
முகப்பருக்கள் அதிகப்படியான எண்ணெய் பசை இருந்தாலோ, உடலில் நீர்ச்சத்து குறைந்து வெப்பநிலை அளவுக்கு அதிகமாக இருந்தாலோ வரும். இதற்கு முதலில் உடலை குளிர்ச்சியுடனும், நீர்ச்சத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, கோடையில் சருமத்திற்கு அதிக கவனிப்புகளை செலுத்த வேண்டும். இங்கு கோடையில் பிம்பிள் வராமல் இருக்க சில சிம்பிளான டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இளநீர்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதுடன், இளநீரைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் உள்ள பிம்பிள் நீங்குவதோடு, அவை வருவது தடுக்கப்பட்டு, முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

ரோஸ் வாட்டர்
கோடையில் ரோஸ் வாட்டரைக் கொண்டு தினமும் முகத்தை பல முறை துடைத்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசைகள் நீங்கி, முகம் கோடையில் பளிச்சென்று இருக்கும்.

வேப்பிலை தண்ணீர்
வேப்பிலையை இரவில் படுக்கும் போது ஒரு பௌல் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவி வந்தால், பிம்பிள் நீங்குவதோடு, சரும சுருக்கங்களும் மறையும்.

காப்பர் தண்ணீர்
கோடையில் காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடித்து வந்தால் நல்லது. அதுமட்டுமின்றி, காப்பர் பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டுள்ள நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால், பிம்பிள் மட்டுமின்றி, அதனால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.

தண்ணீர்
தண்ணீர் மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு தண்ணீரை அதிக அளவில் குடிப்பதோடு, அவ்வப்போது குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முகம் பிரகாசமாகவும், பிம்பிள் இல்லாமலும் இருக்கும்.

குறிப்பு
பிம்பிள் முகத்தில் வந்தால், அதனை நகம் கொண்டு பிய்த்து எடுக்க கூடாது. அப்படி செய்தால், அதிலிருந்து வெளிவரும் சீழ் மற்ற இடங்களில் பட்டு, அதனால் பிம்பிள் இன்னும் அதிகமாகும். ஆகவே பிம்பிள் வந்தால், முகத்தில் கைகளை வைப்பதை தவிர்த்திடுங்கள்.



Click it and Unblock the Notifications