Latest Updates
-
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்..
கோடையில் பிம்பிள் வருவதைத் தடுக்க சில சிம்பிளான டிப்ஸ்...
கோடை வந்தாலே உங்கள் முகத்தில் வலியைத் தரக்கூடிய முகப்பருக்கள் வந்து தொல்லையைத் தருகிறதா? என்ன செய்வதென்றே தெரியவில்லையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
முகப்பருக்கள் அதிகப்படியான எண்ணெய் பசை இருந்தாலோ, உடலில் நீர்ச்சத்து குறைந்து வெப்பநிலை அளவுக்கு அதிகமாக இருந்தாலோ வரும். இதற்கு முதலில் உடலை குளிர்ச்சியுடனும், நீர்ச்சத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, கோடையில் சருமத்திற்கு அதிக கவனிப்புகளை செலுத்த வேண்டும். இங்கு கோடையில் பிம்பிள் வராமல் இருக்க சில சிம்பிளான டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இளநீர்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதுடன், இளநீரைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் உள்ள பிம்பிள் நீங்குவதோடு, அவை வருவது தடுக்கப்பட்டு, முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

ரோஸ் வாட்டர்
கோடையில் ரோஸ் வாட்டரைக் கொண்டு தினமும் முகத்தை பல முறை துடைத்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசைகள் நீங்கி, முகம் கோடையில் பளிச்சென்று இருக்கும்.

வேப்பிலை தண்ணீர்
வேப்பிலையை இரவில் படுக்கும் போது ஒரு பௌல் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவி வந்தால், பிம்பிள் நீங்குவதோடு, சரும சுருக்கங்களும் மறையும்.

காப்பர் தண்ணீர்
கோடையில் காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடித்து வந்தால் நல்லது. அதுமட்டுமின்றி, காப்பர் பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டுள்ள நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால், பிம்பிள் மட்டுமின்றி, அதனால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.

தண்ணீர்
தண்ணீர் மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு தண்ணீரை அதிக அளவில் குடிப்பதோடு, அவ்வப்போது குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முகம் பிரகாசமாகவும், பிம்பிள் இல்லாமலும் இருக்கும்.

குறிப்பு
பிம்பிள் முகத்தில் வந்தால், அதனை நகம் கொண்டு பிய்த்து எடுக்க கூடாது. அப்படி செய்தால், அதிலிருந்து வெளிவரும் சீழ் மற்ற இடங்களில் பட்டு, அதனால் பிம்பிள் இன்னும் அதிகமாகும். ஆகவே பிம்பிள் வந்தால், முகத்தில் கைகளை வைப்பதை தவிர்த்திடுங்கள்.



Click it and Unblock the Notifications
