Latest Updates
-
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க..
முகத்தில் உள்ள மேடு பள்ளங்களைப் போக்குவது எப்படி?
சிலருக்கு முகத்தில் ஆங்காங்கு மேடு பள்ளங்களாக இருக்கும். அவை உங்கள் முகத்தின் அழகையே கெடுக்கும். இப்படி மேடு பள்ளங்கள் ஏற்படுவதற்கு காரணம், சருமத் துளைகளானது விரிந்து கொண்டே போவதோடு, அவ்விடத்தில் அழுக்குகளும், எண்ணெய்களும் அதிகம் சேர்ந்து, மேன்மேலும் பெரிதாகிக் கொண்டே இருக்கும்.
பதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!!!
சரி, உங்கள் முகத்தில் மேடு பள்ளங்கள் உள்ளதா? அவற்றை எப்படி போக்குவது என்று தெரியவில்லையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு முகத்தில் உள்ள மேடு பள்ளங்களைப் போக்குவதற்கு செய்ய வேண்டியவை கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து பின்பற்றி வந்தால், விரைவில் அதனை மறைக்கலாம்.
முகப்பரு வர ஆரம்பிச்சுடுச்சா? உடனே சமையலறைக்கு போங்க...

படி #1
சருமத்தை சுத்தப்படுத்த ஓர் சிறந்த வழி ஆவிப் பிடிப்பது. ஆவி பிடிப்பதன் மூலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியே வந்துவிடும். பின் சுத்தமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

படி #2
ஆவி பிடித்த பின், ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் வெளியே வந்த அழுக்குகளை தேய்த்து முற்றிலும் வெளியேற்றிவிடலாம். அதற்கு உப்பை நீரில் கலந்து அதனைக் கொண்டு மென்மையாக ஸ்கரப் செய்யலாம்.

படி #3
ஸ்கரப் செய்ததை அடுத்து, திறந்துள்ள சருமத்துளைகளை மூட வேண்டும். அதற்கு ஐஸ் கட்டிகளைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் திறந்த சருமத்துளைகளை மூடிவிடும்.

படி #4
ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து, முகத்திற்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி மென்மையாக மசாஜ் செய்யவும்.

டிப்ஸ் #1
இரவில் படுக்கும் முன் முகத்தைக் கழுவுங்கள். முக்கியமாக மேக்கப் போட்டிருந்தால், இரவில் படுக்கும் முன் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி துடைத்து எடுத்துவிடுங்கள். ஒருவேளை நீங்கள் மேக்கப் பயன்படுத்தாவிட்டால், முகத்தை நீரினால் ஒருமுறை கழுவுங்கள். இதனால் சருமத் துளைகளில் அழுக்குகள் சேர்வதைத் தவிர்க்கலாம்.

டிப்ஸ் #2
சருமத்திற்கு பொருத்ததாத அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். இல்லாவிட்டால் அவை உங்கள் சருமத் துளைகளை மேலும் பெரிதாக்கிவிடும்.
உங்களுக்கு வேறு ஏதேனும் டிப்ஸ் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications