Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
பட்டுப்போன்ற மென்மையான சருமத்தைப் பெற உதவும் க்ரீன் டீ ஃபேஸ் பேக்குகள்!
அனைவருக்குமே க்ரீன் டீயை தினமும் குடித்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும் என்று தெரியும். அதேப்போல் அதனைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்கலாம் என்பது தெரியுமா?
அதிலும் சருமம் அதிக வறட்சியாகவோ, எண்ணெய் பசையுடனோ, சுருக்கங்களுடன் முதுமைத் தோற்றத்தை தரும் வகையில் இருந்தால், க்ரீன் டீ கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வாருங்கள். ஏனெனில் க்ரீன் டீயில் சரும செல்களைப் பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது.
சரி, இப்போது க்ரீன் டீயைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!

எண்ணெய் பசை சருமத்திற்கு...
சருமத்தில் அதிக அளவில் எண்ணெய் பசை இருந்தால், அதனை நீக்க, 1 டீஸ்பூன் அரிசி மாவுடன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.

வறட்சியான சருமத்திற்கு...
உங்கள் முகத்தில் வறட்சி அதிகம் இருந்தால், 1 டீஸ்பூன் மில்க் க்ரீம், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, அதில் 1-2 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் வறட்சியினால் ஆங்காங்கு வெள்ளைத்திட்டுகள் காணப்படுவது தடுக்கப்படும்.

சென்சிடிவ் சருமத்திற்கு...
சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், 1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1-2 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள், கருமை, கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி, முகம் பொலிவோடு மின்னும்.

பளபளப்பான சருமத்திற்கு...
உங்களுக்கு சுருக்கங்கள், கரும்புள்ளிகள் அதிகம் உள்ளதா? உங்கள் முகத்தின் பொலிவு பாதிக்கப்படுகிறதா? அப்படியெனில் 2 டீஸ்பூன் தேனுடன், 1-2 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கலந்து, அதனை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, முகம் பளபளப்புடன் காணப்படும்.

புத்துணர்ச்சியான சருமத்திற்கு...
நாள் முழுவதும் அயராமல் வேலை செய்து, முகம் வாடி உள்ளதா? அப்படியென்றால் 1 டீஸ்பூன் மசித்த வாழைப்பழ கூழுடன், 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1-2 டீஸ்பூன் க்ரீன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் செய்து வந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.



Click it and Unblock the Notifications











