Latest Updates
-
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா? -
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்! -
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க புரியாத புதிராக இருப்பார்களாம்... இவங்கள யாராலும் புரிஞ்சிக்க முடியாதாம்...! -
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...! -
ரம்ஜான் ஸ்பெஷல் ஆப்கானி மட்டன் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
முகம் எண்ணெய் பசையா இருக்கா? ஸ்கரப் பண்ணுங்க...

மேக்-கப் போடும் முன்...
* குளித்து முடித்து, முகத்திற்கு மேக்-கப் செய்யும் முன், சிறிது எலுமிச்சை சாற்றை முகத்திற்கு தடவி, 10 நிமிடம் கழித்து, மேக் கப் செய்ய வேண்டும்.
* முகத்திற்கு எந்த ஒரு பொருளை போடும் போதும், அப்போது மோரை முகத்திற்கு தடவி, 10-15 நிமிடத்திற்குப் பின் எதையும் போட வேண்டும்.
* எங்கேனும் பார்ட்டி செல்லும் போது, முகத்திற்கு மே-கப் செய்வதற்கு முன்பு, முகத்தை ஐஸ் கட்டிகளால் சிறிது நேரம் தேய்த்து, பின் காய வைத்து, பிறகு மேக்-கப் போட்டால், சருமம் எண்ணெய் பசையோடு காணப்படுவதை தவிர்க்கலாம்.
மற்ற ஃபேஸ் ஸ்கரப்கள்...
* ஆப்பிளை மிகவும் மெலிதாக நறுக்கி, அதனை முகத்தின் மேல் வைத்து, 15 நிமிடம் கழித்து, அதனை நீக்கிப் பார்த்தால், சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, முகத்தில் இருக்கும் சருமத்துளைகளையும் மெதுவாக நீங்கச் செய்யலாம்.
* ஒரு கப் அரிசி மாவை எடுத்துக் கொண்டு, அதோடு நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து சேர்த்து, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு, முகத்தை கழுவி, ஈரத்துடன் இந்த கலவையை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* அரிசியை 1/2 மணிநேரம் ஊற வைத்து, அதனை நன்கு அரைத்து, அதோடு தக்காளி சாற்றை விட்டு, அந்த கலவையை உடல் முழுவதற்கும் தடவி ஊற விட வேண்டும். 15 நிமிடத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடலில் இருக்கும் இறந்த செல்கள் நீங்குவதோடு, எண்ணெய் பசையுள்ள சருமத்தில் இருக்கும் பழுப்பு நிற சருமத்தையும் நீக்கிவிடும்.
* எண்ணெய் பசை அதிகம் உள்ள சருமத்தில் சருமத்துளைகள் அதிகமாக இருந்தால், அதற்கு டோனரை பயன்படுத்த வேண்டும். மேலும் அந்த சருமத்தில் கரும்புள்ளிகள் நீங்கி, மென்மையான சருமத்தை பெற, சர்க்கரை கலந்திருக்கும் ஸ்கரப் தான் சிறந்தது. ஆகவே அதற்கு காப்பி பவுடரை, சர்க்கரையுடன் கலந்து, 2 துளிகள் ஆலிவ் ஆயிலை ஊற்றி, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவலாம்.
* மிகவும் விரைவாக ஸ்கரப் செய்ய, பால் பவுடருடன் சிறிது சர்க்கரை மற்றும் தண்ணீரை விட்டு கலந்து, அந்த கலவையை முகத்திற்கு தடவி, ஸ்கரப் செய்யலாம்.



Click it and Unblock the Notifications











