Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப தினமும் நைட் இந்த ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: உங்கள் முகம் பொலிவிழந்து மிகவும் டல்லாக காணப்படுகிறதா? என்ன தான் முகத்தை சோப்பு பயன்படுத்தி கழுவினாலும், முகம் பளிச்சென்று மாறவில்லையா? அப்படியானால் உங்கள் முகச் சருமத்தில் இறந்த செல்கள் அதிகம் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டுமானால், ஸ்க்ரப் செய்ய வேண்டும். சருமத்தில் தேங்கியுள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு கடைகளில் பல்வேறு ஸ்க்ரப்கள் விற்கப்படுகின்றன. ஆனால் கெமிக்கல் கலந்த ஸ்க்ரப்கள் சருமத்திற்கு அவ்வளவு நல்லதல்ல.

முக்கியமாக கெமிக்கல் கலந்த ஸ்க்ரப்புகளை தினமும் பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள எண்ணெய் பசையும் முழுமையாக நீக்கப்பட்டு, சருமம் அதிகம் வறண்டு போகும்.
எனவே சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க சிறந்த வழி இயற்கை பொருட்களைக் கொண்டு ஸ்க்ரப்புகளை தயாரித்து பயன்படுத்துவது தான். நமது சமையலறையில் உள்ள பல பொருட்கள் ஒரு நல்ல ஸ்க்ரப்பாக செயல்படும்.
இப்போது ஒருசில நேச்சுரல் ஸ்க்ரப்புகளைக் காண்போம். அவற்றில் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து தினமும் பயன்படுத்தி, எப்போதும் பளிச்சென்று ஜொலியுங்கள்.
நேச்சுரல் ஸ்க்ரப் #1
* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர், 1/4 டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் அல்லது நீர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு முகத்தை நீரில் கழுவி, துடைத்துவிட்டு, தயாரித்து வைத்துள்ள ஸ்க்ரப்பை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்தால், முகம் எப்போதும் பளிச்சென்று இருக்கும்.
நேச்சுரல் ஸ்க்ரப் #2
* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் காபி தூள், 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1/4 டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை நீர் அல்லது பால் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு தயாரித்த கலவையை இரவு தூங்கும் முன், முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன் பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாக மின்னும்.
நேச்சுரல் ஸ்க்ரப் #3
* இந்த ஸ்க்ரப்பிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1/4 டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பால் அல்லது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு முகத்தை நீரால் கழுவி, துடைத்த பின், தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* இப்படி தினமும் இரவு செய்வதனால் இறந்த செல்கள் நீங்குவதோடு, முகப்பரு, பிம்பிள், எண்ணெய் பசை போன்றவை கட்டுப்படுவதோடு, சருமமும் மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்கும்.



Click it and Unblock the Notifications