Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
வறட்சியான சருமத்திற்கான மேக்-கப் டிப்ஸ்....

* எந்த வகையான சருமம் இருந்தாலும், மேக்-கப் போடுவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி முகத்தை நன்கு கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும். அதேப் போல் மேக்-கப்பை இரவில் படுக்கும் முன்பும் நீக்கிவிட வேண்டும். ஏனெனில் அப்போது தான் சரும செல்கள் எளிதில் மூச்சுவிட முடியும். இல்லையெனில் மேக்-கப் போடுவதற்கு பயன்படுத்தும் அழகுப் பொருட்களில் இருக்கும் கெமிக்கல்கள் சரும செல்களை பாதிக்கும்.
* மேக்-கப் போடுவதற்கு 10-20 நிமிடத்திற்கு முன், கிளின்சிங் மில்க் வைத்து கிளின்ஸ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கிவிடுவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். பின்னர் கிளின்ஸ் செய்து காய வைத்தப் பின்னர், சிறிது நேரம் கழித்து, மேக்-கப் போட வேண்டும். இதனால் சருமம் வறட்சியின்றி எண்ணெய் பசையுடன் இருக்கும்.
* மேக்-கப் டிப்ஸில் வறட்சியை நீக்க சிறந்த வழி என்னவென்றால், அது ஃபௌண்டேஷனுடன் சிறிது மாய்ச்சுரைசரை சேர்த்து கலந்து தடவியப் பின், மேக்-கப் போட வேண்டும். ஒரு வேளை கிளின்சிங் மில்க் வைத்து செய்துவிட்டால், அதிகமான அளவில் மாய்ச்சுரைசரை ஃபௌண்டேஷனுடன் சேர்க்க கூடாது.
* வறட்சியான சருமம் இருந்தால், கன்சீலரை பயன்படுத்தக் கூடாது. ஒருவேளை முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை மறைக்க வேண்டுமெனில் அப்போது, ஃபௌண்டேசனை விட லைட்டான நிறத்தல் இருக்கும் கன்சீலரைப் பயன்படுத்த வேண்டும்.
* மேக்-கப் போடுவதற்கு முன் ஜெல் பயன்படுத்துவதற்கு பதிலாக கிரீமி ப்ளஷ்ஷை பயன்படுத்த வேண்டும். அதிலும் மிகவும் லேசான நிறத்தில் கன்னங்களில் அவற்றை தடவ வேண்டும்.
* எப்போது சருமம் வறட்சியுடன் காணப்படுகிறதோ, அப்போது சருமத்திற்கு எந்த ஒரு பவுடரையும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவை மேலும் சருமத்தை அசிங்கமாக காண்பிக்கும். ஒரு வேளை மாய்ச்சுரைசர் வேலை செய்யவில்லை என்றால், அப்போது மிகவும் லேசாக மேக்-கப் போட்டாலே போதுமானது.
இவையே வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கான சில மேக்-கப் டிப்ஸ். வேறு ஏதாவது டிப்ஸ் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











