மேக் அப் போட்டா சுத்தமா இருக்கணும்!

By Mayura Akilan

Make up tips
திருமணம், பண்டிகை என்றாலே மேக் அப் போட்டு கலக்கலாய் கிளம்பிவிடுவர் நம் பெண்கள். மேக் போடுவதோடு மட்டும் கடமை முடிந்துவிடுவதில்லை. அது கலைந்து நம் உள்ள அழகையும் கெடுத்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேக் அப் அதிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம்.

மேக் அதிகமாக போட்டுவிட்டோமே என்று நினைப்பவர்கள் சிறிதளவு பஞ்சு எடுத்து அதிகமுள்ள இடங்களில் துடைக்கவும். அந்த இடத்தை காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்யலாம்.

அதிகப்படியான மேக் அப்பினை சரி செய்ய பேஷியல் கிளன்சர் சிறந்த பொருளாகும். அதிகமாக இருக்கும் இடங்களில் கிளன்சர் போட்டு கழுவலாம். கன்னத்தில் அதிகமாக ரூஜ் அப்பிவிட்டால் பஞ்சு எடுத்து கன்னங்களில் உருட்டலாம். சிறிதளவு காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்யலாம்.

கண் இமைகளின் மேல் ஐஷேடோ அதிகமாவிட்டால் சிறிதளவு கிரீம் போட்டு கழுவி விடலாம். லிப்ஸ்டிக் அதிகமாகிவிட்டால் பிளைன் டிஸ்யூ பேப்பர் வைத்து லேசாக ஒற்றி எடுக்கலாம். இதனால் லிப்ஸ்டிக் அதிகமாக போட்டது போல தெரியாது.

மேக்அப் கலைக்க

பண்டிகை, விழா மற்றும் பார்ட்டிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின்னர், தூங்கச் செல்வதற்கு முன்பாக மேக்கப்பை நன்றாக கழுவி விடவும். இதனால் சருமத்தின் இயல்புத்தன்மை பாகாக்கப்படும். மேக் அப் போட்டவாறு தூங்குவது சருமத்தை பாதிக்கும். எனவே சருமத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள் மேக் அப் கலைத்து விட்டு தூங்குவதுதான் பாதுகாப்பானது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

மேக்கப்பை கழுவி சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு விடும். குறிப்பாக கண்களைச் சுற்றியிருக்கும் மேக்கப்பை கலைப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்த வழி.

இரண்டு சொட்டு பேபி ஷாம்புவை எடுத்து கைவிரல்களில் தடவிக் கொண்டு, கண் இமை மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும். பின்னர் நன்றாக கண்களை மூடிக் கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும் வரும்.

Story first published: Saturday, May 5, 2012, 11:34 [IST]
Desktop Bottom Promotion