Latest Updates
-
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா?
எந்த மாதிரி தலைமுடிக்கு எது பெஸ்ட் ஹேர்ஆயில்... இத தெரிஞ்சிக்கிட்டு யூஸ் பண்ணுங்க...
தலைமுடியைப் பொறுத்தவரை நாம் எல்லோருமே செய்கிற மிகப்பெரிய தவறே தலைக்கு எண்ணெய் தேய்க்காதது தான். ஆனால் எண்ணெய் தான் நாம் தலைமுடிக்கு தருகிற மிகச்சிறந்த ஊட்டச்சத்து. அதிலும் குறிப்பாக தலைக்கு குளிப்பதற்
எல்லாருக்கும் தெரியும் அழகுத் துறையில் கற்றாழை ஜெல்லின் பயன் என்பது எல்லையில்லாதது. இது சருமத்திற்கு மட்டுமல்ல கூந்தலில் ஏற்படும் எண்ணிலடங்காத பிரச்சினைகளையும் களைகிறது. இதிலுள்ள புரோட்டியோலைடிக் என்சைம் தலையில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாதிப்படைந்த செல்களை நீக்கி முடி வளர்ச்சியை தூண்டுகிறது. நல்ல அடர்த்தியாக கூந்தல் வளரவும் உறுதுணை செய்கிறது. கற்றாழை ஜெல்லில் இயற்கையாகவே 96% அளவு நீர்ச்சத்து உள்ளது. இதனால் கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தையும் போஷாக்கையும் கொடுக்கிறது.

கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய்
அதிலும் கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்ந்த கலவை ஒரு மேஜிக் பவர் என சொல்லலாம். தேங்காய் எண்ணெய் காலங்காலமாக கூந்தல் உதிர்தல், கூந்தல் வளர்ச்சி மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு பயன்பட்டு வருகிறது. வழுக்கை, இளநரை, கூந்தலுக்கு ஈரப்பதமும் கொடுக்கிறது. கற்றாழை ஜெல் ஒரு க்ளீன்சர் மாதிரி செயல்பட்டு கூந்தல் பிரச்சினைகளை ஒட்டுமொத்தமாக சரி செய்கிறது.
பராச்சூட் அட்வான்ஸ்டு ஆலோவேரா ஹேர் ஆயில்
இந்த இரண்டு பொருட்களும் சேர்ந்த கலவை கண்டிப்பாக நமக்கு ஒரு மேஜிக் அனுபவத்தை கொடுக்கும். இந்த பராச்சூட் அட்வான்ஸ்டு ஆலோ வேரா ஹேர் ஆயில் புதிதாக தலைமுடிக்கென்றே உருவெடுத்த அவதார் எனலாம். இதில் கற்றாழையின் அற்புத குணங்களும் அதே நேரத்தில் தேங்காய் எண்ணெய்யின் போஷாக்குகளும் ஒருங்கே காணப்படுவது இதன் தனிச்சிறப்பாகும்.
பயன்கள்
இதனால் உங்கள் கூந்தல் கருகருவென பட்டு போல் ஜொலிக்கும். அதே நேரத்தில் உங்கள் கூந்தலை பாதிக்கும் எந்த கெமிக்கல் பொருட்களும் இதில் சேர்க்கப்படவில்லை. இந்த இரண்டு அதிசயமான இயற்கை பொருட்களுடன் செறிவூட்டப்பட்ட, இந்த நவீன பராச்சூட் அட்வான்ஸ்டு ஆலோவேரா உங்கள் அன்றாட கூந்தல் பராமரிப்பு தேவைகளைப் பூர்த்தி செய்ய சிறந்தது. அதனால் தான் இதன் புகழ் எட்டு திக்கும் புகழ் பெற்று விளங்குகிறது. வணிக ரீதியாகவும் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஏதுவானது
நீங்கள் தலையில் எண்ணெய் தேய்க்கவே பயப்படக் காரணம். ஆபிஸ் போகும் சமயங்களில் தலையில் பிசு பிசுவென எண்ணெய் பிசுக்கு இருக்கும், மேலும் தலைமுடியும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு பார்க்கவே பொலிவில்லாமல் காணப்படும். ஆனால் இந்த நவீன ஆயிலில் இந்த மாதிரியான எந்த பிரச்சினைகளும் இல்லாமல் உங்களுக்கு ஒரு திருப்தியான லுக்கை கொடுப்பதோடு கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். இதை கொஞ்சமாக உங்கள் கையில் எடுத்து சிறுது மசாஜ் செய்து தலையில் அப்ளே செய்தாலே போதும் கூந்தல் பட்டு போன்று நேராக சிக்கல் இல்லாமல் பராமரிக்க எளிதாகவும் அடர்த்தியாகவும் காணப்படும். அதே நேரத்தில் மிகவும் நெடியுடன் கூடிய மூலிகைகள் சேர்க்காமல் வெறும் தேங்காய் எண்ணெயின் நறுமணமே இருப்பதால் உங்கள் மூக்கிற்கு எந்த இடையூறும் இருக்காது. கண்டிப்பாக இது உங்களுக்கு ஒரு நற்செய்தி தான் அல்லவா. மென்மையான கூந்தலோடு உங்கள் கூந்தல் பளபளக்கவும் போகிறது. அப்படியே ஸ்ல்க்கி ஸ்சைனி கூந்தலை பெறலாம். உங்கள் கூந்தலும் காற்றில் இனி அழகாக அசைந்தாடப் போகிறது. ஏனெனில் இதில் ஒட்டும் தன்மை கிடையாது.
பயன்படுத்தும் முறை
உங்கள் கையில் உங்கள் கூந்தலுக்கு தேவையான அளவை எடுத்து தலை மற்றும் கூந்தலில் அப்ளே செய்து மசாஜ் செய்யுங்கள். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தலை தடுக்கிறது. சில நேரங்களில் நீங்கள் எண்ணெய் தேய்க்க விரும்பவில்லை என்றால் பாதிக்கப்பட்ட முடிகளில் மட்டும் ஆயிலை தடவி பிறகு சாம்பு கொண்டு அலசி விடுங்கள். பின்னர் இயற்கையாகவே கூந்தல் பளபளக்க ஆரம்பித்து விடும்.
பிராண்ட்
இந்தியாவை பொருத்தவரை பாராசூட் அட்வான்ஸ்டு ஒரு சிறந்த பிராண்ட் ஆக இருந்து வருகிறது. இப்பொழுது வந்துள்ள ஆலோவேரா மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்த ஆயிலும் கூட மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல மில்லியன் மக்களின் விருப்பமாக திகழ்கிறது.
பின்னே ஏன் இன்னும் யோசிக்கிறீங்க? அருகில் உள்ள கடைகளுக்கு சென்று பாராசூட் அட்வான்ஸ்டு ஆலேவேரா வாங்கி 100% பலனை பெறுங்கள். இனி ஆரோக்கியமான கூந்தல் உங்கள் உள்ளங்கையில்.



Click it and Unblock the Notifications











