செம்பருத்தியையும் நெல்லிக்காயையும் உங்க முடியில 'இப்படி' யூஸ் பண்ணா... கிடுகிடுன்னு முடி வளருமாம்!

Hibiscus And Amla Oil: முடி உதிர்தல் என்பது இன்றைய வாழ்க்கை முறை பிரச்சனைகளில் இருக்கும் முக்கியமான பிரச்சனை. மாறிவரும் தட்பவெப்ப நிலை மற்றும் வேகமான வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பதால், முடி பராமரிப்பு சில நேரங்களில் பின்வாங்கலாம்.

அதிக முடி உதிர்தலையோ அல்லது பல முடி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்போது, நாம் தலைமுடி பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துகிறோம். எனவே, உங்கள் உச்சந்தலையில் இருந்து அனைத்து முடிகளும் உதிர்ந்து கீழே விழும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக, நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.

Hibiscus And Amla Oil For Hair Loss In Tamil

முடி உதிர்வை எதிர்த்துப் போராடுவதற்கு பல சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் உள்ளன என்றாலும், அதிசயங்களைச் செய்யக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அத்தகைய ஒரு பயனுள்ள தீர்வு செம்பருத்தி மற்றும் ஆம்லா எண்ணெய் கலவையாகும். பண்டைய காலத்தில் முடி பராமரிப்பில் இந்த பொருட்கள் முக்கியமானதாக இருந்தது.

தற்போதும், இந்த இரண்டு பொருட்களோடு தேங்காய் எண்ணெயும் மிக பிரபலமான முடி பராமரிப்பு பொருளாக இருக்கிறது. முடி உதிர்தலுக்கான இந்த அதிசக்தி வாய்ந்த ஹேர் ஆயிலை எவ்வாறு தயாரிக்கலாம் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

செம்பருத்தி மற்றும் ஆம்லா எண்ணெய்

முடி உதிர்வை எதிர்த்துப் போராடுவதற்கு செம்பருத்தி மற்றும் நெல்லிக்காய் எண்ணெயின் அதிசக்தி வாய்ந்த விளைவுகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்த சக்திவாய்ந்த கலவை எவ்வாறு முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் நுண்ணறைகளை பலப்படுத்துகிறது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் உலர்ந்த செம்பருத்தி பூக்கள்
  • 1 கப் புதிய அல்லது உலர்ந்த அம்லா (இந்திய நெல்லிக்காய்)
  • 2 கப் தேங்காய் எண்ணெய்

செய்முறைகள்

ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி குறைந்த வெப்பத்தில் அது உருகும் வரை சூடாக்க வேண்டும். காய்ந்த செம்பருத்திப் பூக்கள் மற்றும் நெல்லிக்காயை தேங்காய் எண்ணெயில் சேர்க்க வேண்டும். இந்த கலவையை கிளறி, சுமார் 20 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் அப்படியே விடவும்.

20 நிமிடங்களுக்குப் பிறகு, பாத்திரத்தை வெப்பத்திலிருந்து அகற்றி, கலவையை குளிர்விக்க விடவும். ஆறியதும், செம்பருத்திப் பூக்கள் மற்றும் நெல்லிக்காயை வடிகட்டி சுத்தமான கொள்கலனில் எண்ணெயை வடிகட்டவும். செம்பருத்தி மற்றும் ஆம்லா எண்ணெய் இப்போது பயன்படுத்த தயாராக உள்ளது.

இந்த எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது?

உங்கள் உச்சந்தலை மற்றும் முடிக்கு எண்ணெய் தடவி, சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் 30 நிமிடங்களுக்கு எண்ணெய் தலையில் இருக்கட்டும் அல்லது ஆழமான சீரமைப்பிற்காக ஒரே இரவு முழுவதும் அப்படியே வைத்திருங்கள்.

பின்னர், லேசான ஷாம்பு கொண்டு, வெதுவெதுப்பான நீரில் உங்கள் தலைமுடியை நன்கு அலச வேண்டும். நல்ல முடிவை பெற வாரத்திற்கு 2-3 முறை இந்த செயல்முறையை மீண்டும் செய்ய வேண்டும்.

செம்பருத்தி மற்றும் நெல்லிக்காய் எண்ணெயின் நன்மைகள்

முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது: செம்பருத்தி மற்றும் நெல்லிக்காய் எண்ணெயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது முடியின் வேர்களைத் தூண்டி, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.

முடி உடைவதைத் தடுக்கிறது: செம்பருத்தி மற்றும் நெல்லிக்காய் எண்ணெயில் உள்ள இயற்கையான புரதங்கள் முடியின் தண்டுக்கு வலுவூட்டி, உடைப்பு மற்றும் பிளவுகள் ஏற்படுவதைக் குறைக்கிறது.

உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கிறது: இந்த எண்ணெய்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உச்சந்தலைக்கு ஊட்டமளித்து, ஒட்டுமொத்த முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் பொடுகை குறைக்கிறது.

முடியை மென்மையாக்குகிறது: செம்பருத்தி மற்றும் நெல்லிக்காய் எண்ணெய் உங்கள் தலைமுடியை மென்மையாகவும், மிருதுவாகவும், சமாளிக்கக்கூடியதாகவும் மாற்றுகிறது.

இறுதிக் குறிப்பு

உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் செம்பருத்தி மற்றும் நெல்லிக்காய் எண்ணெயைச் சேர்ப்பது உங்கள் முடியை வலுவானதாக மாற்றும். குறிப்பாக நீங்கள் முடி உதிர்தலால் பாதிக்கப்பட்டிருந்தால், முடி வளர்ச்சிக்கு அதிகரிக்கும். இன்றே பலன்களை அனுபவிக்க இந்த எண்ணெயை பய்னபடுத்த தொடங்குங்கள்.

Story first published: Friday, August 4, 2023, 19:02 [IST]
Desktop Bottom Promotion