Just In
- 36 min ago இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- 1 hr ago காமதா ஏகாதசி 2024 எப்போது? தேதி, நேரம், பூஜை குறித்த தகவல்கள்...
- 2 hrs ago குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
Don't Miss
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- News நாளை முதல் கட்ட லோக்சபா தேர்தல்:102 தொகுதிகளில் 2019-ல் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவு? முழு விவரம்!
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Movies சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஆண்களே, உங்களின் தலை முடி துர்நாற்றம் அடிக்கிறதா..? இதனை போக்க இவற்றை செய்தாலே போதும்...
அழகான முடி வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லாமல் இருக்கும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஏனோ முடியின் மீது ஒரு மோகம் இருக்கத்தான் செய்கிறது. முடி அடர்த்தியாகவும், கருமையாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பம். ஆனால், நமது முடியின் அழகையே முடியில் இருந்து வரும் துர்நாற்றம் கெடுத்து விடுகிறது.
உண்மைதாங்க, நமது முடி கருமையாக அடர்த்தியாக இருந்தால் போதாது. முடியில் நாற்றம் வீசினால் நம் அருகில் யார்தான் வருவார்கள். குறிப்பாக ஆண்கள் வெளியில் அதிகம் சுற்றுவதால் முடியை பராமரிப்பதில்லை. இதனால் அதிக துர்நாற்றம் ஏற்படுகிறது. முடியில் வீசும் நாற்றத்தை எளிமையாக போக்க உங்களின் வீட்டில் உள்ள இந்த பொருட்களே போதும். வாங்க, எப்படினு தெரிந்து கொள்வோம்.
துர்நாற்றம் ஏன் வீசுகிறது..?
முடியில் அளவுக்கு அதிகமாக அழுக்கு சேர்ந்தாலோ, பொடுகு அதிகமானாலோ, பேன்கள் இருந்தாலோ தலையில் துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் அதிகமானால் பல வித பிரச்சினைகள் தலைக்கு வர தொடங்கும். குறிப்பாக முடியின் ஆரோக்கியம் கெட்டு விடும். எனவே, துர்நாற்றம் வீசினால் உடனடியாக இந்த பதிவில் கூறும் குறிப்புகளை செய்யுங்கள்.
பூண்டு இருந்தாலே போதும்...!
தலையில் ஏற்பட கூடிய துர்நாற்றத்தை எளிமையாக குணப்படுத்த ஒரு அற்புத வழி உள்ளது. இதற்கு வெறும் பூண்டு இருந்தாலே போதும்.
தேவையானவை :-
பூண்டு 3
தேங்காய் எண்ணெய் 1/2 கப்
செய்முறை :-
முதலில் தேங்காய் எண்ணெய்யை எடுத்து கொண்டு அதில் பூண்டை ஊற வைத்து கொள்ள வேண்டும். பிறகு, இந்த எண்ணெய்யை சிறிது சூடு காட்டி ஆற வைக்கவும். இந்த எண்ணையை தலைக்கு தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், தலையில் அடிக்க கூடிய துர்நாற்றம் விரைவில் போய் விடும்.
ஆலிவ் எண்ணெய்
தலையில் அடிக்க கூடிய துர்நாற்றத்தை எளிமையாக போக்க ஆலிவ் எண்ணெய் உதவும். இதற்கு முதலில் ஆலிவ் எண்ணெய்யை தலைக்கு தேய்த்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு, சிறிது சிகைக்காய் அல்லது ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்தால் நாற்றம் போகும்.
MOST READ: சீக்கிரம் நீங்கள் அப்பாவாகணுமா..? அப்போ தினமும் 2 கப் காஃபி குடிங்க போதும்...
கலவை எண்ணெய்
ஒரு சில எண்ணெய்யை தலைக்கு கலந்து குளித்தால் தலையில் அடிக்க கூடிய துர்நாற்றம் சீக்கிரமாக போய்விடும். இதற்கு இந்த குறிப்பு உதவும்.
தேவையானவை :-
வேப்பெண்ணெய் 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
செய்முறை :-
வேப்பெண்ணயை அப்படியே தலைக்கு தேய்க்க கூடாது. மாறாக வேறு சில எண்ணெய்களுடன் கலந்து தடவலாம். குறிப்பாக தேங்காய் எண்ணெய், அல்லது ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து தலைக்கு தடவி குளித்தால் நாற்றத்தை எளிதாக போக்கி விடலாம்.
வெங்காயம்
நாம் சமையலுக்கு பெரிதும் பயன்படுத்தும் இந்த வெங்காயம் நமது முடியின் ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் பெரிதும் உதவுகிறது. மேலும், தலையில் உள்ள கிருமிகளை கொன்று நாற்றத்தை போக்குகிறது. குறிப்பாக இதில் உள்ள சல்பர் முடியின் துர்நற்றத்தை போக்க உதவுகிறது.
செய்முறை :-
முதலில் 3 வெங்காயத்தை எடுத்து கொண்டு, சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு அதனை நன்றாக அரைத்து கொண்டு வடிகட்டி கொள்ளவும். இந்த சாற்றை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு சிறிது ஷாம்பூ சேர்த்து தலைக்கு குளித்தால் நாற்றம் இல்லாமல் இருக்கும்.
MOST READ: அந்த காலத்து ராஜாக்கள் ராணிகளை மயக்க என்னென்ன செய்தார்கள்னு தெரியுமா...?
எலுமிச்சை :-
தலைக்கு எலுமிச்சை தேய்த்து குளிப்பதால் பல்வேறு நலன்கள் உள்ளது. குறிப்பாக பொடுகு, துர்நாற்றம் போன்றவை குணமாகும். மேலும், முடியின் ஆரோக்கியத்தையும் எலுமிச்சை அதிகரிக்கும். எனவே, எலுமிச்சை சாற்றை தலைக்கு தேய்த்து வந்தால் துர்நாற்றம் விலகி விடும்.
இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.