Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
நரை முடி இனிமேலும் வரவேக் கூடாதுன்னா இந்த மூலிகை எண்ணெயை யூஸ் பண்ணுங்க!!
கூந்தல் அடர்த்தியாக வளர மற்றும் முகப்பருக்களை போக்க நீங்கள் வீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
முகப்பரு, சரும அலர்ஜி முடி உதிர்தல், நரை முடி இந்த கால பிள்ளைகளிடம் விரைவில் பாதிப்புக்கும் பிரச்சனைகள் இவை. இந்த பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் பழக்க முறைகள்தான்
ஷாம்புக்களை தவிர்த்துவிட்டு இங்கே சொல்லப்பட்டிருக்கும்படி உங்கள் கூந்தலுக்கு உபயோகித்துப் பாருங்கள். கூந்தல் அடர்த்தியாவது மட்டுமில்லாமல் நரை முடி என்பது வரவே வராது. நரை முடி ஆரம்பத்தில் இருப்பவர்களும் இந்த எண்ணெயை உபயோகித்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் அழகான முடி பெறலாம்.

நரை முடியை தடுப்பதற்கும் முகப்பருக்கள் வராமல் காப்பதற்கும், அதற்கான எளிய குறிப்புகளை இங்கே தரப்பட்டுள்ளது. படியுங்கள்.

மூலிகை எண்ணெய் :
மருதாணி இலை, கறிவேப்பிலை, வெந்தயக் கீரை, வெள்ளை கரிசலாங்கண்ணி இவை எல்லாமும் தலா 4 கைப்பிடி, பெரிய நெல்லிக்காய் அரை கிலோ.. இவற்றை நன்றாக அரைத்துச் சாறெடுங்கள்.

மூலிகை எண்ணெய் :
இதனுடன் தண்ணீர் கலக்காத திக்கான தேங்காய்ப் பால் 4 லிட்டர் அல்லது தேங்காய் எண்ணெய் 1 கிலோ கலந்து நன்கு காய்ச்சினால் கரும்பச்சை நிறத்தில் எண்ணெய் கிடைக்கும்.
இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் சில வாரங்களிலேயே நரை கூந்தல் அத்தனையும் கருங்கூந்தலாக மாறிவிடும். சிறு வயது முதலே குழந்தைகளுக்குத் தடவி வந்தால் கூந்தல் அத்தனை சீக்கிரத்தில் நரைக்காது..

முகப்பருக்களை போக்க :
துளசி, புதினா, வேப்பிலை மூன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஜூஸ் ஆக்குங்கள். பச்சை பயறு மாவுடன் கொஞ்சம் வேப்பிலையை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். முகத்தை கழுவிய பின் இந்த சாறை எடுத்து முகத்தில் இதமாக தேய்க்கவும்.

வாரம் ஒருமுறை :
காய்ந்த பின் பிறகு, பச்சைப் பயறுடன் கலந்த வேப்பிலையை முகத்தில் போட்டு, காய்ந்ததும் முகம் கழுவுங்கள். இதை வாரம் ஒருமுறை செய்தால் முகப்பருவுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்.

வேப்பிலை ஆவி :
தண்ணீரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதில் வேப்பிலை இலைகளைப் போட்டு ஆறியவுடன் அந்தத் தண்ணீரில் தினமும் முகம் கழுவுங்கள்.
அதோடு, மாதம் இருமுறை துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அந்த ஆவியில் முகத்தைக் காட்டுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தாலே நல்ல வித்தியாசம் தெரியும்.



Click it and Unblock the Notifications