Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
நரை முடி இனிமேலும் வரவேக் கூடாதுன்னா இந்த மூலிகை எண்ணெயை யூஸ் பண்ணுங்க!!
கூந்தல் அடர்த்தியாக வளர மற்றும் முகப்பருக்களை போக்க நீங்கள் வீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
முகப்பரு, சரும அலர்ஜி முடி உதிர்தல், நரை முடி இந்த கால பிள்ளைகளிடம் விரைவில் பாதிப்புக்கும் பிரச்சனைகள் இவை. இந்த பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் பழக்க முறைகள்தான்
ஷாம்புக்களை தவிர்த்துவிட்டு இங்கே சொல்லப்பட்டிருக்கும்படி உங்கள் கூந்தலுக்கு உபயோகித்துப் பாருங்கள். கூந்தல் அடர்த்தியாவது மட்டுமில்லாமல் நரை முடி என்பது வரவே வராது. நரை முடி ஆரம்பத்தில் இருப்பவர்களும் இந்த எண்ணெயை உபயோகித்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் அழகான முடி பெறலாம்.

நரை முடியை தடுப்பதற்கும் முகப்பருக்கள் வராமல் காப்பதற்கும், அதற்கான எளிய குறிப்புகளை இங்கே தரப்பட்டுள்ளது. படியுங்கள்.

மூலிகை எண்ணெய் :
மருதாணி இலை, கறிவேப்பிலை, வெந்தயக் கீரை, வெள்ளை கரிசலாங்கண்ணி இவை எல்லாமும் தலா 4 கைப்பிடி, பெரிய நெல்லிக்காய் அரை கிலோ.. இவற்றை நன்றாக அரைத்துச் சாறெடுங்கள்.

மூலிகை எண்ணெய் :
இதனுடன் தண்ணீர் கலக்காத திக்கான தேங்காய்ப் பால் 4 லிட்டர் அல்லது தேங்காய் எண்ணெய் 1 கிலோ கலந்து நன்கு காய்ச்சினால் கரும்பச்சை நிறத்தில் எண்ணெய் கிடைக்கும்.
இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் சில வாரங்களிலேயே நரை கூந்தல் அத்தனையும் கருங்கூந்தலாக மாறிவிடும். சிறு வயது முதலே குழந்தைகளுக்குத் தடவி வந்தால் கூந்தல் அத்தனை சீக்கிரத்தில் நரைக்காது..

முகப்பருக்களை போக்க :
துளசி, புதினா, வேப்பிலை மூன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஜூஸ் ஆக்குங்கள். பச்சை பயறு மாவுடன் கொஞ்சம் வேப்பிலையை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். முகத்தை கழுவிய பின் இந்த சாறை எடுத்து முகத்தில் இதமாக தேய்க்கவும்.

வாரம் ஒருமுறை :
காய்ந்த பின் பிறகு, பச்சைப் பயறுடன் கலந்த வேப்பிலையை முகத்தில் போட்டு, காய்ந்ததும் முகம் கழுவுங்கள். இதை வாரம் ஒருமுறை செய்தால் முகப்பருவுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்.

வேப்பிலை ஆவி :
தண்ணீரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதில் வேப்பிலை இலைகளைப் போட்டு ஆறியவுடன் அந்தத் தண்ணீரில் தினமும் முகம் கழுவுங்கள்.
அதோடு, மாதம் இருமுறை துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அந்த ஆவியில் முகத்தைக் காட்டுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தாலே நல்ல வித்தியாசம் தெரியும்.



Click it and Unblock the Notifications











