Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
வேகமாக முடி வளரச் செய்யும் 5 பொருட்கள் எவை தெரியுமா?
கூந்தல் வேகமாக வளர இங்கே சில முக்கிய பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முயற்சித்துப் பாருங்கள்.
ஷாம்பு, நீர், பொடுகு, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவைகள்தான் கூந்தல் வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள். உங்கள் கூந்தல் வளர்ச்சியை போதிய முறையில் தூண்டவில்லையென்றால் கூந்தல் வளர்ச்சி முழுவதுமே நின்று போக வாய்ப்பிருக்கிறது.

உங்கள் கூந்தல் செல்களை தூண்டப்படும்போது ரத்த ஓட்டம் அங்கே அதிகரித்து புதிய முடிகள் முளைக்கத் துவங்கும். அவ்வகையில் இயற்கையான பொருட்கள் எவை துரிதமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றன என பார்க்கலாம்.

வெங்காயச் சாறு :
வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து அதனுடல் சிறிது தேன் கலந்து தலையில் த்டவுங்கள். 15 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும். ஒரே வாரத்தில் முடி உதிர்தல் குறைவதை காண்பீர்கள்.

தேங்காய் பால் :
தேங்காய் பால் ஒரு கப் எடுத்து அதில் எலுமிச்சை சாறு அரை மூடி கலந்து தலையில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசுங்கள்.

முட்டை மாஸ்க் :
முட்டையை நன்றாக முழுவதும் நுரைக்கும்படி அடித்து அதில் ஆலில் எண்ணெய் மற்றும் தேன் கலந்து க்ரீம் போல் வரும்படி கலக்குங்கள். இந்த கலவையை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலையை அலசவும். கூந்தல் அடர்த்தியாக வருவது உறுதி

வெந்தயம் மற்றும் சீரகம் :
வெந்தயத்தையும் சீரகத்தையும் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தயிர் கலந்து தலையில் தேய்க்கவும். வாரம் இருமுறை செய்தால் கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை :
நெல்லிக்காய் சாறு அரை கப் எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து மிதமான தீயில் காய்ச்சுங்கள். பிறகு அதில் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் கலந்து தலையில் தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications