மிருதுவான கூந்தல் கிடைக்க உங்களுக்கான ஒரு அருமையான ரெசிபி!!

ஒரே இரவில் மிருதுவான கூந்தலை வீட்டிலேயே பெறுவதற்கான வழிகளை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

By Arunkumar P.m

வீட்டுமுறையில் தயாரிக்கும் பொருட்களை எல்லோரும் விரும்புவர். அவை இயற்கையான தன்மையுடன் இருபதுமட்டுமின்றி கடைகளில் வாங்கும் பொருட்களை விட பாதுகாப்பானவை ஆகும். எனவே இங்கு உங்கள் கூந்தலுக்கான சிறந்த தீர்வுகளை காணலாம். உங்கள் கூந்தலை இதன் மூலம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளலாம்.

அனைவருக்கும் கூந்தல் பராமரிப்பு மிக முக்கியமானதாகும். ஆனால் அனைவரும் சலூனுக்கு சென்று கூந்தலை அழகுபடுத்த அதிக நேரமோ அதிக பணமோ செலவழிக்க முடியாது. எனவே வீட்டுமுறை தீர்வுகளை நாம் நாடலாம்.

மிருதுவான கூந்தலுக்கான வீட்டுமுறை தீர்வுகளை இங்கு காணலாம்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டெப் 1 :

ஸ்டெப் 1 :

முடியின் நீளத்திற்கு தகுந்த அளவிலான தேங்காய் பால், சில தேக்கரண்டி ஆர்கன் எண்ணெய் மற்றும் இவற்றை கலக்க தேவையான பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 2 :

ஸ்டெப் 2 :

தேங்காய் பாலையும் ஆர்கன் எண்ணையையும் நன்கு கலக்க வேண்டும்.தேங்காய் பால் கெட்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இல்லையேல் அது கெட்ட வாசனையை கொடுக்கும்.

ஸ்டெப் 3

ஸ்டெப் 3

அந்த கலவையை கூந்தலின் அனைத்து பகுதிகளிலும் பூச வேண்டும். அந்த கலவை கூந்தலின் நுனியில் நன்கு படுமாறு தேய்க்க வேண்டும்.

 ஸ்டெப் 4 :

ஸ்டெப் 4 :

ஒரு மணிநேரம் கழித்து அதனை நீரில் கழுவிவிட வேண்டும்.சிறந்த தீர்வு வேண்டுமெனில் இரவு முழுவதும் அதனை அப்படியே விட்டு பின்னர் காலையில் கழுவ வேண்டும்.

இது உங்களுக்கு மிருதுவான கூந்தலை பளபளப்புடன் கொடுக்கும். இரவு முழுவதும் கூந்தல் கலையாமல் இருக்க அதற்காக பிரத்தியேகமாக உபயோகிக்கப்படும் தொப்பியை பயன்படுத்தலாம்.

 ஸ்டெப் 5 :

ஸ்டெப் 5 :

ஷாம்பூ உபயோகித்து நன்கு கழுவ வேண்டும்.தேவைப்பட்டால் கண்டிசனர் பயன்படுத்தலாம். முடி நன்கு உலர்ந்த பிறகு நீங்கள் விரும்பும் மென்மையான கூந்தலை பெற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, May 21, 2017, 15:20 [IST]
Desktop Bottom Promotion