உங்கள் கூந்தல் அடர்த்தியாகனுமா? வாரம் ஒருமுறை இந்த சித்த மருத்துவ குறிப்புகளை யூஸ் பண்ணுங்க!!

கூந்தல் அடர்த்தியாக வளர எத்தனையோ சிகிச்சைகள் இருந்தாலும் சித்த மருத்துவம் நல்ல பலன்கலை தரக் கூடியது. அவற்றால் பக்க விளைவுகளும் இல்லை. அவ்வாறு கூந்தலை வளரச் செய்யும் வழிகளை இங்கு காண்போம்.

கூந்தல் மிருதுவாக போஷாக்கோட இருந்தா தனி அழகை தரும். கூந்தல் அடர்த்தியாக வளர வாரம் ஒரு நாள் தலைக்கு மாஸ்க் போன்ற பேக்கை பயன்படுத்துங்கள். தினமும் நன்றாக படிய தலை சீவினால் ரத்த ஓட்டம் பாயும். அடர்த்தியாகவும் வளரும்.

அதை தவிர உங்கள் கூந்தல் அடர்த்தியாக வளர இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 அடர்த்தியாக வளர:

அடர்த்தியாக வளர:

வெந்தயம் மற்றும் குன்றி மணியை பொடி செய்து வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் போட்டு மூடி விடுங்கள்.

ஒரு வாரம் கழித்து அந்த எண்ணெயை உபயோகப்படுத்தத் தொடங்குங்கள். இந்த எண்ணெய் வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் முடி அடர்த்தியாக வளரும்.

முடி உதிர்தல் :

முடி உதிர்தல் :

முடி உதிர்தலை தடுத்தாலே பாதி பிரச்சனை போகும். வேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே விட்டு மறு நாள் அந்த நீரினால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் முடி உதிர்தல் நிற்கும்.

அதிமதுரம் :

அதிமதுரம் :

அதிமதுரப் பொடியை நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். இதனுடன் கால் பாகம் பால் கலந்து தலைமுடியில் தடவி 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசினால் கூந்தல் நன்றாக வளரும்.

கருவேப்பிலை சீரகம் :

கருவேப்பிலை சீரகம் :

கருவேப்பிலை கைப்பிடி மற்றும் 2 ஸ்பூன் சீரகம் எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறியபின் வடிகட்டி அந்த எண்ணெயையை உபயோகித்து வந்தால் கூந்தல் கருகருவென அடர்த்தியாக வளரும்.

போஷாக்கு பெற:

போஷாக்கு பெற:

பப்பாளியின் சதை பகுதியை மசித்து அதனுடன் யோகர்ட்டை கலந்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவினால் வறட்சி நீங்கி கூந்தல் மிருதுவாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion