Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
கூந்தலை நீரில் அலசிய பின் தவிர்க்க வேண்டிய செயல்கள்!!
மென்மையான மற்றும் பட்டு போன்ற முடியை தான் அனைவரும் விரும்புகின்றனர். அவ்வாறான முடியை பெறுவதென்பது எளிதான காரியம் இல்லை. அதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பெரும்பாலானோர், என் கூந்தல் என் பேச்சை கேட்பதில்லை என்று வருந்துவதுண்டு. பொதுவாக அது அவ்வளவு எளிதான விஷயமில்லை என்றாலும், ஒழுங்கான முறையில் பராமரித்தால், கூந்தலை பட்டு போல் ஆக்கி விட முடியும். ஒருவேளை அதை கண்டு கொள்ளாமல் விட்டால், நீங்கள் தவறு செய்கின்றீர்கள் என்று அர்த்தம்.
கூந்தல் உதிர்தல், முடி வெடிப்பு போன்றவை கூந்தலை ஒழுங்காக பராமரிக்காத செயலின் விளைவாக ஏற்படுவதாகும். எனவே கூந்தலின் சிக்கலை போக்கி, அதை மென்மையாகவும், மிருதுவாகவும், உங்கள் சொல் பேச்சை கேட்கும் படியாகவும் ஆக்குவதற்கு, ஒருசில எளிய முறைகளை மேற்கொள்வதால் மாற்ற முடியும். அதிலும் இப்போது கூந்தலை நீரில் அலசிய பின் தவிர்க்க வேண்டிய சில செயல்களைக் காண்போம்.

அடிக்கடி சீவ வேண்டாம்
கூந்தலை அடிக்கடி வாரினால் உதிரக்கூடும். ஆகவே அதெல்லாம் எதுவும் இல்லை என்றெண்ணி, அடிக்கடி கூந்தலை சீவி சேதப்படுத்தாமல் இருங்கள்.

அதிகமாக உலர்த்த வேண்டாம்
கூந்தலை காய வைக்கும் கருவியை உபயோகித்து, கூந்தலின் அழகை கெடுத்துக் கொள்ள வேண்டாம். இதனால் கூந்தலுக்கு வெப்பத்தை ஏற்படுத்துகிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே இயற்கை முறையில் காய வைத்தாலே போதுமானது.

சரியான சீப்பை பயன்படுத்தவும்
கூந்தலுக்கு ஏற்ற சீப்பை பயன்படுத்துங்கள். அதிலும் நைலான் அல்லது பிளாஸ்டிக் பொருளால் செய்யப்பட்ட சீப்பை பயன்படுத்தவும்.

உடனே வெளியே செல்ல வேண்டாம்
சுருட்டை முடி உள்ளவர்கள், கூந்தலை அலசிய உடனே வெயிலில் செல்லக்கூடாது.

சிக்கெடுப்பதற்கு விரல்களை பயன்படுத்தவும்
ஈரமான கூந்தலை சீப்பை கொண்டு சிகெடுக்காமல், கையின் உதவியை கொண்டு சீவ வேண்டும். இதன் மூலம் கேசத்திற்கு மசாஜ் செய்தது போல் இருக்கும்.

எண்ணெய் வேண்டாம்
அதிகமாக எண்ணெய் தடவி, வெளி இடங்களுக்கு சென்றால், தலையில் அழுக்கு சேர்ந்து கூந்தல் உதிர ஆரம்பிக்கும். வேண்டுமென்றால் முதல் நாள் இரவில் எண்ணெய் தடவி, மறுநாள் காலையில் முடியை ஷாம்பு கொண்டு அலசும் பழக்கத்தை மேற்கொள்ளலாம்.

இறுக்கமான ரப்பர் பேண்ட் வேண்டாம்
கூந்தலை இறுக்கி கட்டுவதே தவறு. அதிலும் இறுக்கமான பேண்ட்கள், அதை விட தவறு. இதனால் கூந்தல் முறியக்கூடும்.

பின்னல் வேண்டாம்
ஈரமான கூந்தலை இறுக பின்ன வேண்டாம். இதனால் அவை உடைய கூடும். மேலும் உலர்த்திய பின் அலங்காரம் செய்யவும்.

சீப்பு பயன்படுத்த வேண்டாம்
ஈரமான முடிக்கு சீப்பு பயன்படுத்தும் முன், அகன்ற பற்களுடைய சீப்பு பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

மசாஜ்கள் வேண்டாம்
ஷாம்பு போட்டு மசாஜ் செய்வது மிகவும் தீங்கை ஏற்படுத்தும். ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது பலவீனமாக இருக்கும் என்பதால், கூந்தல் காய்ந்த பின்னரே அதில் கையை வைக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications