Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க..
தலையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறதா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...
கூந்தல் நன்கு அழகாக இருந்தால் மட்டும் போதாது. கூந்தல் நன்கு நறுமணத்துடனும் இருக்க வேண்டும். ஆனல் அவ்வாறு கூந்தலை நறுமணத்துடன் வைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. கூந்தல் நன்கு மணத்துடன் இருக்க வேண்டுமெனில், முதலில் கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசுவதற்கான காரணத்தை அறிய வேண்டும்.
பொதுவாக கூந்தலை சரியாக நீரில் அலசாவிட்டால், கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசும். ஏனெனில் வியர்வையானது நீண்ட நாட்கள் தலையில் தங்கினால், அவை துர்நாற்றத்தை ஏற்படுத்தி, ஸ்காப்பில் பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இத்தகைய துர்நாற்றத்தைப் போக்குவதற்கு, நல்ல நறுமணமிக்க எண்ணெய்களை கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.
அதுமட்டுமல்லாமல், கூந்தலில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்திற்கு, ஹேர் மாஸ்க் மற்றும் பேக்குகள் கூட காரணமாக இருக்கும். உதாரணமாக, முட்டை கூந்தலுக்கு மிகவும் நல்லது என்று கூந்தலுக்கு பயன்படுத்தியப் பின், கூந்தலில் இருந்து முட்டையின் துர்நாற்றமானது வீசும். ஆகவே இத்தகைய ஹேர் மாஸ்க்குகளைப் போட்டப் பின்பு, கூந்தலின் மணத்தை அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து நறுமணமிக்கதாக வைத்துக் கொள்ளலாம்.
அதிலும் இயற்கை பொருட்களைக் கொண்டு, கூந்தலின் நறுமணத்தை அதிகரித்தால் தான், எப்போதும் சிறந்தது. இப்போது கூந்தலின் நறுமணத்தை அதிகரிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போம்.

தலைக்கு குளிக்கவும்
எப்போது தலைக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குளிக்க வேண்டும். ஏனெனில் தற்போது சுற்றுச்சூழல் மிகவும் மோசமானதாக இருப்பதால், தலைக்கு எளிதில் தூசிகள் படிய வாய்ப்புள்ளது. ஆகவே தொடர்ச்சியாக ஒருநாள் விட்டு ஒருநாள் குளித்தால், கூந்தலின் நறுமணத்தை தக்க வைக்கலாம்.

எலுமிச்சை
எலுமிச்சையை கூந்தலுக்குப் பயன்படுத்தினாலும், கூந்தல் நறுமணத்துடன் இருக்கும். மேலும் பொடுகு இருந்தாலும் நீங்கிவிடும். எனவே எலுமிச்சை சாற்றை கூந்தலுக்கு தடவி, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் ஒரு சிறந்த நறுமணமூட்டும் பொருள். இது சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. ஆனால் கூந்தலுக்கு அவ்வளவு பெரிய நன்மையை அளிக்காவிட்டாலும், கூந்தலுக்கு ரோஸ் வாட்டரைத் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் நறுமணத்துடன் இருக்கும்.

மல்லிகை எண்ணெய்
நறுமணமிக்க எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்தினாலும், கூந்தலின் வாசனை அதிகரிக்கலாம். அதிலும், மல்லிகை எண்ணெயைக் கொண்டு தலைக்கு மசாஜ் செய்தால், கூந்தல் நறுமணத்துடன் இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

பூக்கள்
பெண்களுக்கு பொதுவாக கூந்தலுக்கு பூ வைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே தலைக்கு தினமும் நல்ல நறுமணமிக்க பூக்களை வைப்பதன் மூலம், கூந்தலின் நறுமணத்தை அதிகரிக்கலாம்.

செம்பருத்தி எண்ணெய்
பொதுவாக செம்பருத்தி எண்ணெய் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. அதிலும் அந்த எண்ணெயை கூந்தலுக்கு தடவி வந்தால், கூந்தல் கருமையடைவதுடன், மயிர்கால்கள் நன்கு வலிமையாகும். மேலும் செம்பருத்தி எண்ணெயில் நல்ல நறுமணம் இருப்பதால், இதனை கூந்தலுக்கு பயன்படுத்த, கூந்தலில் நறுமணமானது வீசும்.

சாம்பிராணி புகை
அக்காலத்தில் எல்லாம் முடியை உலர வைப்பதற்கு, சாம்பிராணி புகையைப் போடுவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம், இயற்கையாகவே கூந்தலின் நறுமணத்தை தக்க வைக்கலாம்.

ஹென்னா
ஹென்னா என்னும் மருதாணிப் பொடியை கூந்தலுக்கு பயன்படுத்தினால், நரைமுடியானது நிறம் மாறுவதோடு, கூந்தலும் நன்கு நுறுமணத்துடன் இருக்கும்.

தேயிலை நீர்
கொதிக்கும் நீரில் சிறிது தேயிலையை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, பின் அதனை வடிகட்டி, அந்த நீரைக் கொண்டு கூந்தலை அலசினால், கூந்தல் நன்கு மணத்துடன் இருக்கும்.

வெப்பத்தில் இருந்து விலகி இருக்கவும்
ஒருவேளை ஸ்கால்ப்பில் அதிகப்படியான வியர்வை உண்டாகி துர்நாற்றம் வீசுவதால், மேற்கூறிய அனைத்து முறைகளைப் பின்பற்றியும் கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசினால், வெப்பமான இடத்தில் இருந்து விலகி, நல்ல குளிர்ச்சியான இடத்தில் இருப்பதே சிறந்தது.



Click it and Unblock the Notifications











