Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
கருமையான கூந்தலை பெறுவதற்கு வீட்டிலேயே எண்ணெய் இருக்கு!!!

* ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன், 10 செம்பருத்தி பூக்களை போட்டு, அந்த எண்ணெயை வெயிலில் வைத்து, பூவானது எண்ணெயில் முழுவதும் மூழ்கும் வரை வைக்கவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு சூடேற்றி, பின் குளிர்ந்ததும், ஒரு நாள் விட்டு அதனை கூந்தலுக்கு தடவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து கூந்தலுக்கு தடவி வந்தால், கூந்தல் நன்கு கருமையாக வளர்வதோடு, அடர்த்தியாகவும் வளரும்.
* ஒரு பௌலில் தண்ணீரை விட்டு லேசாக சூடேற்றி, அதில் 100 மல்லிகைப் பூக்களை போட்டு, இரண்டு நாட்கள் மூடி ஊற வைக்கவும். இரண்டு நாட்கள் கழித்து, அந்த தண்ணீரை பார்த்தால், தண்ணீரின் மேல் ஒருவித எண்ணெய் போன்ற பொருள் மிதக்கும். பின்னர் அந்த பூக்களை வெளியே போட்டு, அந்த எண்ணெயை தினமும் படுக்கும் முன் கூந்தலுக்கு தடவி, மறுநாள் கூந்தலை அலசி வரவும். இது ஒரு சிறந்த ஹேர் அரோமா தெரபி போல் இருக்கும். இதனால் கூந்தலானது பட்டுப்போல் மின்னுவதோடு, அதிலிருந்து வரும் வாசனை தலைவலியை சரிசெய்யும்.
* இரவில் படுக்கும் முன், பத்து நெல்லிக்காயை 1 லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஊற வைக்கவும். பின்பு அதனை மறுநாள் காலையில் கொதிக்க வைத்து, சூடானது ஆறியதும், அந்த எண்ணெயை வாரத்திற்கு மூன்று முறை தடவ வேண்டும். நெல்லி ஒரு சிறந்த சுத்தப்படுத்தி, அதிலும் இது கூந்தலுக்கு நல்ல நிறத்தை தரும். மேலும் இது கூந்தலுக்கு ஒரு நல்ல தரத்தையும் தரும்.
* செம்பருத்திப் பூ, மருதாணி இலைகள், கறிவேப்பிலை இலைகள், கசகசா இலைகள் நீரில் ஊற வைத்தது, வேப்பிலை, வெந்தயம் போன்றவற்றை நன்கு காய வைத்து, அதனை அரைத்து, உருண்டைகள் போல் செய்து, நல்லெண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை தேய்த்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாகவும், கருமையாகவும் வளரும்.
மேலே சொன்ன அனைத்து எண்ணெய்களையும் இரவில் படுக்கும் முன்பு பயன்படுத்த வேண்டும். அதிலும் இந்த எண்ணெய்களை தடவிய பின், வெளியே செல்ல வேண்டுமென்றால், குளிர்ந்த நீரில் அலசியப் பின்னரே செல்ல வேண்டும். அதனால் கூந்தலானது கருமையாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications