Latest Updates
-
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா?
கூந்தல் எண்ணெய் பசையா இருக்கா? இதோ சில டிப்ஸ்...

1. எண்ணெய் பசை போக ஒரு சிறந்த டிப்ஸ்-னா தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். எண்ணெய் பசை அதிகமாக இருப்பவர்கள் தினமும் தலைக்கு குளிப்பது நல்லது. ஏனென்றால் இவர்களது உடலில் எண்ணெய் சுரப்பி அளவுக்கு அதிகமாக சுரக்கிறது. இதனாலே கூந்தல் எண்ணெய் பசையோடு இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் குளித்தால் தலையானது சுத்தமாக இருக்கும்.
2. தலைக்கு குளிக்கும் போது, தலைக்குப் போடும் ஷாம்புவை பார்த்து வாங்க வேண்டும். ஏனென்றால் தற்போது வந்துள்ள ஷாம்புகள் அனைத்திலும், முடி வறண்டு காணப்படாமல் சற்று எண்ணெய் பசையோடு காணப்பட வேண்டும் என்பதற்காக, அதற்கேற்றவாறு தயாரித்துள்ளனர். ஆகவே அப்பேற்பட்ட ஷாம்புவை தவிர்த்தல் நல்லது.
3. பொதுவாக பெண்கள் அனைவருக்கும் தலையில் கை வைக்காமல் இருக்கவே முடியாது. அப்படி வைப்பதால் கையில் இருக்கும் எண்ணெய் தலையில் தங்கி, பின் முடி பார்க்க எண்ணெய் பசையோடு காணப்படும். ஆகவே தலையில் கை வைக்க வேண்டாம். மேலும் தலைக்கு பயன்படுத்தும் சீப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
4. வெளியே செல்லும் போது ஸ்கார்ப் அல்லது தொப்பியை போட்டு செல்லவும். இதனால் தலையில் தூசி படியாமல் இருக்கும். பெரும்பாலும் சூரிய ஒளி நேரடியாக முடியில் படுவதால் முடி அதிகமாக உடைவதோடு, உதிரவும் செய்யும். ஆகவே மறக்காமல் ஏதேனும் ஒன்றை அணிந்து செல்லுங்கள்.
5. அதிகமாக வேர்த்தால் முடியானது ஈஸியாக எண்ணெய் பசை அடைந்துவிடும். ஆகவே அதிகமாக வேர்ப்பவர்களும் தினமும் தலைக்கு குளிக்க வேண்டும்.
6. எலுமிச்சை, எண்ணெய் பசை போக்குவதற்கு சிறந்த ஒன்று. தலைக்கு குளிக்கும் முன், சிறிது எலுமிச்சை சாற்றுடன் தயிரைக் கலந்து தலைக்கு தடவி 30 நிமிடம் கழித்து குளிக்கவும். இவ்வாறு செய்தால் எண்ணெய் பசை குறைவதோடு, தலையில் பொடுகும் வராது.
இவை அனைத்தையும் செய்வதோடு தினமும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் சாப்பிடும் போது காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். இதனால் கூந்தலானது எண்ணெய் பசை அடையாமல் இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications