Latest Updates
-
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்
Hair Care Tips: தலைமுடிக்கு மெஹந்தி பயன்படுத்துவதில் இவ்வளவு ஆபத்துகள் இருக்கா? இனிமே பார்த்து யூஸ் பண்ணுங்க..
Hair Care Tips: மருதாணி என்று பொதுவாக அறியப்படும் மெஹந்தி, இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய வண்ணம், இயற்கை முடி சாயம் மற்றும் கண்டிஷனராகப் பயன்படுத்தப்படுகிறது. அதன் இயற்கையான குணம் கூந்தலுக்கு செழுமையான சிவப்பு-பழுப்பு நிற இயற்கையான சாயலை அளிக்கும் அதே வேளையில் கண்டிஷனிங் நன்மைகளை வழங்கும் திறனும் அதில் உள்ளது.
மருதாணி பல நூற்றாண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், மற்ற முடி சிகிச்சைகளைப் போலவே, மருதாணியின் பயன்பாடும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம், குறிப்பாக அதனை சரியாகப் பயன்படுத்தப்படாவிட்டால் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த பதிவில் மருதாணியை கூந்தலில் பயன்படுத்துவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

அலர்ஜிகள் ஏற்படலாம்
மெஹந்தியை தலைமுடியில் பயன்படுத்துவதால் பொதுவாக ஏற்படும் பக்க விளைவு ஒவ்வாமை எதிர்வினைகள் ஆகும். பெரும்பாலான மக்களுகளுக்கு இது பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், சிலர் இதனால் அலர்ஜிகளை அனுபவிக்கலாம்.
அலர்ஜியின் அறிகுறிகள் அரிப்பு, சிவத்தல், வீக்கம் அல்லது உச்சந்தலையில் சொறி ஆகியவை அடங்கும். ஒவ்வாமை விளைவுகளின் அபாயத்தைத் தணிக்க, முழு உச்சந்தலையிலும் முடியிலும் மெஹெந்தியைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு சிறிய பகுதியில் சோதனையை மேற்கொள்வது நல்லது.
நிற மாறுபாடு
முடியில் மெஹெந்தி பயன்படுத்துவதால் ஏற்படும் மற்றொரு சாத்தியமான பக்க விளைவு வண்ண மாறுபாடு ஆகும். மெஹெந்தியின் இந்த விளைவு, மெஹெந்தி பொடியின் தரம், பயன்படுத்தும் காலம் மற்றும் முடியின் இயற்கையான நிறம் போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடலாம்.
மெஹந்தி பொதுவாக முடிக்கு சிவப்பு-பழுப்பு நிறத்தை அளிக்கும் அதே வேளையில், அதன் விளைவாக வரும் நிறம் பல்வேறு முடி வகைகள் மற்றும் அமைப்புகளில் வித்தியாசமாகத் தோன்றும். கூடுதலாக, காலப்போக்கில் மெஹந்தியை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது நிற மாறுபாட்டை நிரந்தரமாக மாற்ற வழிவகுக்கும்.
உச்சந்தலையில் எரிச்சல்
மெஹந்தியை முடியில் பயன்படுத்தியப் பிறகு சிலர் உச்சந்தலையில் எரிச்சல் அல்லது அசௌகரியத்தை அனுபவிக்கலாம். இது உச்சந்தலையில் அரிப்பு, எரிதல் அல்லது சிவத்தல் போன்றவற்றை வெளிப்படுத்தலாம்.
மெஹெந்தி ஒவ்வாமை காரணமாகவோ அல்லது நீண்ட நேரம் தலையில் விட்டு வைத்திருப்பதாலோ உச்சந்தலையில் எரிச்சல் ஏற்படலாம். உச்சந்தலையில் எரிச்சலைக் குறைக்க, நிபுணர்களின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிப்பது, மெஹெந்தியை நீண்ட நேரம் தலையில் ஊறவிடுவதைத் தவிர்ப்பது மற்றும் பயன்பாட்டிற்குப் பிறகு நன்கு கழுவுவதும் முக்கியம்.
முடியின் அமைப்பு மாறலாம்
தலைமுடியில் மெஹந்தியைப் பயன்படுத்துவது காலப்போக்கில் முடியின் அமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். மெஹந்தி அதன் கண்டிஷனிங் பண்புகளுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், சிலர் இதனை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் முடியின் அமைப்பு கரடுமுரடானதாக மாறலாம்.
இந்த அமைப்பில் ஏற்படும் மாற்றம், முடியின் மீது மெஹெந்தியின் உலர்த்தும் விளைவு அல்லது முடி தண்டுக்குள் சாய மூலக்கூறுகள் குவிந்ததன் காரணமாக இருக்கலாம். முடி அமைப்பைப் பாதுகாக்க, மெஹந்தி சிகிச்சையை ஆழமான கண்டிஷனிங் மற்றும் ஈரப்பதமூட்டும் நடைமுறைகளுடன் சமநிலைப்படுத்துவது அவசியம்.



Click it and Unblock the Notifications











