தலையில சீப்ப வச்சாலே முடி கொத்தா கொட்டுதா? அப்ப பெருஞ்சீரக விதையை இப்படி யூஸ் பண்ணுங்க...!

Hair Fall In Tamil: முடி உதிர்தல் என்பது எல்லா வயது மற்றும் பாலின மக்களையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இன்றைய நாளில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினம் தினம் பல தலைமுடி பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

அனைவருக்கும் முடி உதிர்தல் மிகவும் வெறுப்பூட்டும் மற்றும் சங்கடமான பிரச்சனையாக இருக்கிறது. முடி உதிர்தல் பிரச்சனைக்கு மரபணு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, மன அழுத்தம் மற்றும் தவறான உணவு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. மேலும், பருவ காலம் மற்றும் மாசுபாடுகள் ஆகியவையும் உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

Fennel Seeds To Reduce Hair Fall In Tamil

அதிர்ஷ்டவசமாக, உங்கள் முடி உதிர்வைக் குறைக்க உதவும் சில இயற்கையான வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் பயனுள்ள ஒன்று, உங்கள் சமையலறையில் இருக்கும் பெருஞ்சீரகம் விதைகள். இவை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல, தலைமுடி ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. பெருஞ்சீரக விதைகள் மூலம் முடி உதிர்வை எவ்வாறு குறைக்கலாம் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

முடி உதிர்வை எப்படி குறைப்பது?
பொதுவாக விதைகள் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகின்றன. வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சீரான உணவு உட்பட ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது முடி உதிர்வதைத் தடுக்க உதவும். கூடுதலாக, பிரத்யேகமாக முடி பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவது முடி ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியம். இவை தவிர, சில வீட்டு வைத்தியங்களும் முடி உதிர்வை நிர்வகிப்பதில் பயனுள்ளதாக இருக்கும், மேலும் முடி உதிர்வதை குறைக்க உதவும். அவற்றில் பெருஞ்சீரகம் விதைகளும் ஒன்று.

பெருஞ்சீரகம் விதைகள் பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களின் இயற்கையான மூலமாகும். அவை முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கவும் வலுப்படுத்தவும் உதவுகின்றன. இதன் மூலம் முடியின் வேர்கள் வலுவடைந்து முடி உதிர்வது குறையும். பெருஞ்சீரக விதைகள் பல நூற்றாண்டுகளாக முடி பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பெருஞ்சீரகம் விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் தலைமுடியின் வேர்களை பலப்படுத்துகிறது மற்றும் உங்கள் நுண்ணறைகளுக்கு உயிர் கொடுக்கிறது. இதனால், உங்கள் முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

பெருஞ்சீரக விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது?
இரண்டு ஸ்பூன் பெருஞ்சீரக விதைகளை இரவு முழுவதும் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்கவும். இது அவற்றின் நன்மை பயக்கும் பண்புகளை வெளியிடுவதற்கும் அவற்றை மிகவும் பயனுள்ளதாக்குவதற்கும் உதவும். காலையில், அந்த தண்ணீரை வடிகட்டி, விதைகளை நன்கு பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அந்த பொடியில் சிறிதளவு தயிர் கலந்து பேஸ்ட்டாக தயாரிக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் தடவி சுமார் 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். பின்னர், வெதுவெதுப்பான நீரில் முடியை அலசி, இயற்கையாக உலர விட வேண்டும். சிறந்த முடிவுகளுக்கு இந்த தீர்வை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.

மாற்றாக, சிறிதளவு தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி, அதில் சில ஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகளை சேர்த்து கொதிக்க வைக்கலாம். நன்றாக கொதித்ததும் தண்ணீரை வடிகட்டி, ஒரு பாத்திரத்தில் சேமிக்க வேண்டும். பின்னர், அந்த தண்ணீரை கொண்டு, உங்கள் தலைமுடியை நன்றாக அலச வேண்டும்.

இறுதிக் குறிப்பு
பெருஞ்சீரகம் விதைகளைப் பயன்படுத்துவதைத் தவிர, நீங்கள் ஆரோக்கியமான உணவைப் பின்பற்றவும், நிறைய தண்ணீர் குடிக்கவும் வேண்டும். இது உள்ளிருந்து, உங்கள் தலைமுடியை வலுப்படுத்த உதவும். அதேபோல மென்மையான ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தவது, உங்கள் தலைமுடிக்கு நல்லது.

இந்த வழிமுறைகள் உங்கள் உச்சந்தலையையும் கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், முடி உதிர்வைக் குறைக்கவும் உதவும். கூடுதலாக, முடி உதிர்வைக் குறைக்க ஹேர் ட்ரையர்கள், கர்லிங் அயர்ன்கள் மற்றும் ஸ்ட்ரெய்ட்னர்கள் போன்ற வெப்ப-ஸ்டைலிங் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

Story first published: Wednesday, May 17, 2023, 20:00 [IST]
Desktop Bottom Promotion