Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
அக்குள் மற்றும் கழுத்து பகுதியில் அசிங்கமாக உள்ள மருக்களை உதிர வைக்கும் சில வழிகள்!
இங்கு அக்குள் மற்றும் கழுத்து பகுதியில் அசிங்கமாக உள்ள மருக்களை உதிர வைக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உடலில் அக்குள், கழுத்து, மார்பு போன்ற பகுதிகளில் வரும் மருக்கள், வலியை ஏற்படுத்தாமல் இருக்கலாம். இருப்பினும் அவை அழகைக் கெடுக்கும் வகையில் இருப்பதால், அதை எப்படியாவது நீக்க வேண்டும் என நினைப்போம். ஆனால் அதற்கான சரியான வழி மட்டும் தெரியாது.

பொதுவாக 25% ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த மருக்களைக் கொண்டுள்ளனர். அதுவும் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயைக் கொண்டவர்களுக்கு இந்த மரு பிரச்சனை பொதுவாக இருக்கும். அதோடு, இறுக்கமான உடை அணிந்து சருமத்தில் தொடர்ச்சியாக உராய்வு ஏற்படும் போது, மருக்கள் வர வாய்ப்புள்ளது.
இக்கட்டுரையில் சருமத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிரச் செய்யும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினாலே மருக்களை எளிதில் உதிர வைக்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்
* சருமத்தில் உள்ள மருக்களை உதிரச் செய்வதற்கு ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு மரு உள்ள பகுதியை சுத்தம் செய்து, பின் ஒரு பஞ்சுண்டையை ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து பிழிந்து, மருக்களின் மீது வைத்து நன்கு காய வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், மருக்கள் உலர ஆரம்பிக்கும்.
* இப்படியே தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால், மருக்கள் நன்கு உலர்ந்து உதிர்ந்துவிடும்.

விளக்கெண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா
* 1 1/2 டீஸ்பூன் விளக்கெண்ணெயில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, மருக்களின் மீது தடவி 30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், மருக்கள் உதிர்ந்துவிடும்.

டீ-ட்ரீ ஆயில்
* 4-5 டீஸ்பூன் நீரில், 2-3 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டையின் உதவியுடன் அக்கலவையை மருக்களின் மீது தடவ வேண்டும். பின் அப்பகுதியை உலர வைக்க வேண்டும்.
* இந்த செயல்முறையை ஒரு நாளைக்கு தினமும் 3 முறை என ஒரு மாதம் தொடர்ந்து செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

நெயில் பாலிஷ்
இது மிகவும் எளிமையான ஒரு வழி. அது என்னவெனில் நெயில் பாலிஷை மருக்களின் மீது தடவ வேண்டும். இச்செயலை தினமும் பலமுறை செய்து வந்தால், சீக்கிரம் மருக்கள் உதிர்ந்துவிடும்.

எலுமிச்சை சாறு
* ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியைப் பிழிந்து சாறு எடுத்து, பஞ்சுருண்டையில் நனைத்து மருக்களின் மீது தடவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், மருக்கள் விரைவில் காய்ந்து உதிரும்.
* ஒருவேளை இச்செயலால் மருக்களின் தோற்றத்தில் மாற்றத்தைக் கண்டால், தோல் மருத்துவரிடம் சென்று ஆலோசனைப் பெறுங்கள்.



Click it and Unblock the Notifications