Latest Updates
-
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க...
உடனடியா முகம் பளிச்சிட வேண்டுமா? இந்த சித்த மருத்துவ குறிப்பை ட்ரை பண்ணுங்க!!
இயற்கை முறையில் உங்களை பராமரிக்கும்போது எந்த வித பக்க விளைவில்லாமல் 100 சதவீதம் பலன் கிடைக்கும். கெமிக்கல் கலந்த க்ரீம்களை தவிர்த்து சித்த மருத்துவ அழகுக் குறிப்புகளை பின்பற்றுங்கள்.
சித்த மருத்துவம் விலை மதிப்பில்லாதது. இது எந்த வித செயற்கை காரணிகள் இல்லாமல் உடல் உறுப்புகளை இயற்கையாக மேம்படுத்தும்.

ஆரோக்கியம் மட்டுமல்லாது அழகையும் தருகிறது. அப்படி இயற்கை வழியில் உங்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை எப்படி அழகு படுத்தலாம் என்பதுதான் இங்கே சொல்லப்பட்டுள்ளது.

முகம் உடனடியாக பளிச்சிட:
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவவேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

தேவையற்ற முடியை அகற்ற :
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும்இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

கூந்தல் பிசுபிசுப்பை நீக்க :
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், முட்டையின் வெள்ளைக் கருவில் கொஞ்சம் சர்க்கரையை கலந்துதலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடிஅழகு பெறும்.

கூந்தல் பளபளப்பாக :
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக்குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

வெயிலில் கறுத்து போகாமலிருக்க :
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம்குரு வராமல், வெயிலில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

கண்கள் பிரகாசமாக இருக்க :
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள்பிரகாசமாக இருக்கும்.

மூட்டு கறுப்பை போக்க :
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றைதேய்த்து வந்தால் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.



Click it and Unblock the Notifications