Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
உடனடியா முகம் பளிச்சிட வேண்டுமா? இந்த சித்த மருத்துவ குறிப்பை ட்ரை பண்ணுங்க!!
இயற்கை முறையில் உங்களை பராமரிக்கும்போது எந்த வித பக்க விளைவில்லாமல் 100 சதவீதம் பலன் கிடைக்கும். கெமிக்கல் கலந்த க்ரீம்களை தவிர்த்து சித்த மருத்துவ அழகுக் குறிப்புகளை பின்பற்றுங்கள்.
சித்த மருத்துவம் விலை மதிப்பில்லாதது. இது எந்த வித செயற்கை காரணிகள் இல்லாமல் உடல் உறுப்புகளை இயற்கையாக மேம்படுத்தும்.

ஆரோக்கியம் மட்டுமல்லாது அழகையும் தருகிறது. அப்படி இயற்கை வழியில் உங்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை எப்படி அழகு படுத்தலாம் என்பதுதான் இங்கே சொல்லப்பட்டுள்ளது.

முகம் உடனடியாக பளிச்சிட:
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவவேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

தேவையற்ற முடியை அகற்ற :
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும்இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

கூந்தல் பிசுபிசுப்பை நீக்க :
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், முட்டையின் வெள்ளைக் கருவில் கொஞ்சம் சர்க்கரையை கலந்துதலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடிஅழகு பெறும்.

கூந்தல் பளபளப்பாக :
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக்குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

வெயிலில் கறுத்து போகாமலிருக்க :
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம்குரு வராமல், வெயிலில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

கண்கள் பிரகாசமாக இருக்க :
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள்பிரகாசமாக இருக்கும்.

மூட்டு கறுப்பை போக்க :
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றைதேய்த்து வந்தால் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.



Click it and Unblock the Notifications











