Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
உடல் சோர்வைப் போக்கும் மூலிகை குளியல்!
மூலிகைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலான இந்திய மூலிகைகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிப்பவை. அதேப்போல் மூலிகைகள் பல சரும நோய்த்தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும்.
அதற்கு மூலிகைகளை அரைத்து சருமத்தில் தடவி பயன் பெறலாம் அல்லது அவற்றை குளிக்கும் நீரில் சேர்த்து ஊற வைத்து குளிக்கலாம். இதனால் சரும பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, மன அழுத்தம், உடல் சோர்வு போன்றவையும் நீங்கும்.

சீமைச்சாமந்தி பூ
சீமைச்சாமந்தி பூசை குளிக்கும் நீரில் ஊற வைத்து குளிப்பதன் மூலம், சருமத்தில் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுத்து சருமம் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

புதினா
உடல் சூடு அதிகமாக இருந்து, அதனைத் தணிப்பதற்கு பல வழிகளை முயற்சித்தும் பலன் கிடைக்காவிட்டால், குளிக்கும் நீரில் புதினாவை சேர்த்து ஊற வைத்துக் குளியுங்கள். இதனால் உடலின் வெப்பநிலை குறையும்.

பார்ஸ்லி
உங்களுக்கு அழகான சருமம் வேண்டுமா? அப்படியெனில் ஒரு கையளவு பார்ஸ்லியை குளிக்கும் டப் நீரில் போட்டு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, அந்நீரினுள் 20 நிமிடம் அமருங்கள். இதனால் சருமத்தின் நிறம் தானாக அதிகரிக்கும்.

துளசி
துளசியையும் குளிக்கும் நீரில் சேர்த்து குளிக்கலாம். குறிப்பாக இந்த மூலிகை சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது. துளசியில் உள்ள மருத்துவ பொருட்கள், சருமத்தில் உள்ள காயங்கள் மற்றும் அரிப்புக்களை சரிசெய்யும்.

ரோஸ்மேரி
ரோஸ்மேரி மூலிகையின் நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும். உங்கள் உடலில் இருந்து வியர்வை துர்நாற்றம் அதிகம் வீசினால், குளிக்கும் நீரில் ரோஸ்மேரியை சேர்த்து குளியுங்கள். இதனால் உடல் துர்நாற்றம் நீங்கும்.

சேஜ்
சேஜ் என்னும் மூலிகையை குளிக்கும் நீரில் சேர்த்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் சேஜ் மூலிகை குளியல் முகப்பருவைப் போக்கும்.

தைம்
தைம் மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை. இந்த மூலிகையைக் கொண்டு வாரம் ஒரு முறை குளியல் மேற்கொண்டால், அனைத்து வகையான சரும பிரச்சனைகளும் குணமாகும். மேலும் தைம் தலைவலி பிரச்சனை இருந்தாலும் நல்ல நிவாரணத்தை அளிக்கும்.



Click it and Unblock the Notifications