Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
மென்மையான பாதங்களைப் பெற சில சூப்பர் டிப்ஸ்...
குளிர்க்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்படும். இத்தகைய வறட்சி சருமத்தின் மென்மைத்தன்மை மற்றும் அழகையே கெடுத்துவிடும். எனவே இந்த வறட்சியை போக்க முயற்சிப்பது அவசியமாகிறது. அதிலும் தற்போது சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்குவதற்கு பல்வேறு மாய்ஸ்சுரைசர்கள் வந்துள்ளன. அதுவும் சருமத்தின் வகைகளுக்கு ஏற்ப கிடைக்கின்றன. ஆகவே அதனைப் பயன்படுத்தினால், வறட்சியைப் போக்கலாம்.
ஆனால் பாதத்தில் ஏற்படும் வறட்சிகளைப் போக்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் பாதத்தில் வறட்சி ஏற்பட்டால், அது குதிகால் வெடிப்பை ஏற்படுத்தி, பாதத்தின் அழகையே பாழாக்கிவிடும். ஆகவே இத்தகைய குதிகால் வெடிப்பு மற்றும் பாத வறட்சியை தடுக்க ஒரு சில செயல்களை தினமும் தவறாமல் செய்து வந்தால், நிச்சயம் நல்ல அழகான மற்றும் மென்மையான பாதங்களைப் பெற முடியும்.
சரி, இப்போது மென்மையான பாதங்களைப் பெற என்ன செயல்களையெல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.

வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்
தினமும் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து வந்தால், பாதங்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் தளர்வடைந்து, எளிதில் வெளியேறி, பாதங்களை மென்மையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளும்.

சுடுநீர் குளியல்
அதனைத் தொடர்ந்து சுடுநீரில் குளிக்கும் போது, அதில் சிறிது ரோஸ் எண்ணெய் அல்லது லாவெண்டர் எண்ணெய் சேர்த்து குளித்தால், பாத வறட்சியுடன், சருமத்தில் ஏற்படும் வறட்சியையும் தடுக்கலாம். மேலும் இதனால் சருமம் பொலிவோடு பட்டுப் போன்று இருக்கும்.

எலுமிச்சை
பாதங்களை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, நன்கு துணியால் துடைத்துவிட வேண்டும். பின் எலுமிச்சை துண்டை எடுத்து சர்க்கரையில் தொட்டு, பிறகு பாதங்களை தேய்த்தால், பாதங்களில் உள்ள நச்சுக்கள் மற்றும் கிருமிகள் வெளியேறிவிடும். இந்த முறையை தொடர்ச்சியாக செய்து வந்தால், நிச்சயம் நல்ல பலன் தெரியும்.

ஸ்கரப் செய்த பின்னர்...
மேற்கூறிய முறையை செய்த பின்னர் தவறாமல் வெதுவெதுப்பான நீரால் பாதங்களை மீண்டும் அலச வேண்டும். இதனால் அது பாதங்களை பொலிவோடும், மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

மசாஜ் செய்யவும்
பின்பு தவறாமல் சிறிது ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களில் தடவி, லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் பாதங்களில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.

இயற்கை வைத்தியம்
ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும 2 டீஸ்பூன் சர்க்கரை எடுத்து, பாதங்களில் தடவி சிறது நேரம் ஸ்கரப் செய்தால், பாதங்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் வெளியேறிவிடும். அதிலும் இதில் சூரியகாந்தி எண்ணெயை பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு
முக்கியமாக பாதங்கள் மென்மையாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமெனில், வெளியே செல்லும் போது கால்களுக்கு சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். இதனால் பாதங்களில் அழுக்குகள் நுழையாமல், பாதங்கள் அழகாக இருக்கும். மேலும் இரவில் பாதங்களை பராமரித்த பின்னர், கால்களுக்கு சாக்ஸ் போட்டுக் கொண்டு படுக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications