Latest Updates
-
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா?
பட்டுப்போன்ற கைகள் வேண்டுமா? இதைப் படிங்க!

கைகள் சொரசொரப்பாக இருந்தால் பார்க்கவே சகிக்காது. அதுவும் வீட்டில் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, என கைகளுக்கு அதிக வேலை கொடுப்பதால் கைகளில் செல்கள் இறந்துவிடும். இதுவே சொறசொறப்பை தரும். கைகளை வெதுவெதுப்பான நீரில் நன்றாக ஊறவைத்து ஸ்க்ரப் செய்தால் போதும் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.
கைகளின் மென்மைக்கு தேன், எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவைகளை உபயோகிக்கலாம். பால் கைகளின் மென்மைக்கும் பளபளப்புக்கும் ஏற்றது. பாலை வெதுவெதுப்பாக காய்ச்சி அதில் கைகளை 5 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ கைகள் மென்மையாகும்.
எலுமிச்சை தோலினை நன்றாக கைகளின் மீது தேய்க்க சொறசொறப்பு நீங்கி சருமம் மென்மையாகும். அதேபோல் கடல் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கைகளில் தேய்க்க கைகளில் கருமை நிறம் இருந்தால் மாறிவிடும். கைகளின் தோல்கள் மென்மையாகும்.
சர்க்கரை, ஆலிவ் எண்ணெய், புதினா ஆயில் ஆகியவற்றுடன் சிறிதளவு பால் சேர்த்து கலந்து கைகளில் பூசி ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் கைகள் பளபளப்பாவதோடு தோல்கள் மென்மையாகும்.
ஒரு அகன்ற கிண்ணத்தில் வெதுப்பான நீரை ஊற்றி ரோஸ்மேரி ஆயில், ரோஜா இதழ்கள், சில துளிகள் ஆலிவ் ஆயில் போன்றவைகளை ஊற்றி கைகளை ஊறவைக்கவும். 10 நிமிடங்கள் ஊறிய பின்னர் மென்மையான துண்டினால் கைகளை கழுவ வேண்டும்.
வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து அதனுடன் 2 டீஸ்பூன் பால், 2 டீஸ்பூன் தேன் கலந்து நன்கு கைகளில் பூசவும். பின்னர் 5 அல்லது 10 நிமிடங்கள் ஊறவைத்து கைகளை குளிர்ந்த நீரில் கழுவவும்.
கைகளை மென்மையாக மசாஜ் சிறந்த முறையாகும். தேங்காய் எண்ணெய், சிறிதளவு பாதம் எண்ணெய், சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஆகியவைகளை கலந்து மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் கைகள் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறும்.



Click it and Unblock the Notifications











