Latest Updates
-
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம்
பட்டுப்போன்ற கைகள் வேண்டுமா? இதைப் படிங்க!

கைகள் சொரசொரப்பாக இருந்தால் பார்க்கவே சகிக்காது. அதுவும் வீட்டில் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, என கைகளுக்கு அதிக வேலை கொடுப்பதால் கைகளில் செல்கள் இறந்துவிடும். இதுவே சொறசொறப்பை தரும். கைகளை வெதுவெதுப்பான நீரில் நன்றாக ஊறவைத்து ஸ்க்ரப் செய்தால் போதும் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.
கைகளின் மென்மைக்கு தேன், எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவைகளை உபயோகிக்கலாம். பால் கைகளின் மென்மைக்கும் பளபளப்புக்கும் ஏற்றது. பாலை வெதுவெதுப்பாக காய்ச்சி அதில் கைகளை 5 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ கைகள் மென்மையாகும்.
எலுமிச்சை தோலினை நன்றாக கைகளின் மீது தேய்க்க சொறசொறப்பு நீங்கி சருமம் மென்மையாகும். அதேபோல் கடல் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கைகளில் தேய்க்க கைகளில் கருமை நிறம் இருந்தால் மாறிவிடும். கைகளின் தோல்கள் மென்மையாகும்.
சர்க்கரை, ஆலிவ் எண்ணெய், புதினா ஆயில் ஆகியவற்றுடன் சிறிதளவு பால் சேர்த்து கலந்து கைகளில் பூசி ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் கைகள் பளபளப்பாவதோடு தோல்கள் மென்மையாகும்.
ஒரு அகன்ற கிண்ணத்தில் வெதுப்பான நீரை ஊற்றி ரோஸ்மேரி ஆயில், ரோஜா இதழ்கள், சில துளிகள் ஆலிவ் ஆயில் போன்றவைகளை ஊற்றி கைகளை ஊறவைக்கவும். 10 நிமிடங்கள் ஊறிய பின்னர் மென்மையான துண்டினால் கைகளை கழுவ வேண்டும்.
வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து அதனுடன் 2 டீஸ்பூன் பால், 2 டீஸ்பூன் தேன் கலந்து நன்கு கைகளில் பூசவும். பின்னர் 5 அல்லது 10 நிமிடங்கள் ஊறவைத்து கைகளை குளிர்ந்த நீரில் கழுவவும்.
கைகளை மென்மையாக மசாஜ் சிறந்த முறையாகும். தேங்காய் எண்ணெய், சிறிதளவு பாதம் எண்ணெய், சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஆகியவைகளை கலந்து மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் கைகள் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறும்.



Click it and Unblock the Notifications