Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
இந்த 4 ராசிக்காரங்க கோபத்தில் என்ன வேணாலும் செய்யும் ஆபத்தானவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொவருக்கும் அவர்களுக்கென சொந்த இயல்பு உள்ளது, இது அவர்களின் ராசி மற்றும் அவரது ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலையைப் பொறுத்தது. அதிகம் கோபப்பட்டாலும் கோபத்தை தங்களுக்குள் அடக்கிக் கொள்வவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால், கோபத்தை அடக்க முடியாமல், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தவிக்கும் சிலரும் இருக்கிறார்கள்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தில், ஜாதகத்தில் சுப கிரகங்கள் நிலை இல்லாமல் இருப்பதால் கோபத்தில் எந்த எல்லையையும் கடக்கும் சில ராசிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ராசிக்காரர்களின் கோபம் மிகவும் ஆபத்தானது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
இந்த ராசிக்காரர்கள் இயல்பிலேயே மிகவும் கோபக்காரர்களாக இருப்பார்கள், ஏனெனில் இது அடிப்படையில் நெருப்பு ராசியாகும். எனவே இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் ஒரு உண்மையை மறைக்க நூறு பொய்களைச் சொல்வார்கள், அவர்களின் லட்சியம் மிகவும் உயர்ந்தது, அதை அடைவதற்கு அவள் செய்யும் எந்த வேலையையும் தவறாகக் கருத மாட்டார்கள். தங்கள் ஆசையை நிறைவேற்ற அவர்கள் எந் எல்லைக்கும் செல்லலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மிகவும் எதார்த்தவாதிகள் என்று கருதப்பட்டாலும், ஜோதிடத்தில் அவர்களை விட பெரிய பொய்யர் யாரும் இல்லை என்று நம்பப்படுகிறது. விஷயங்களை மறைப்பதிலும், விஷயங்களைக் கையாள்வதிலும் அவர்களை விட நிபுணர்கள் யாரும் இல்லை.
இவர்களின் தனித்திறமை என்னவெனில், மற்றவர்களின் கண்களைப் பார்த்தே அவர்களின் நோக்கம் என்னவென்பதை அறிந்து கொள்வார்கள், ஆனால் இவர்களின் மனதில் என்ன நடக்கிறது என்பதை யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. இவர்களின் அடுத்த நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அதனால்தான் மிதுன ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் பொதுவாக ராசிச்சக்கரத்தின் மிகவும் நல்ல ஆன்மாக்களாகக் கருதப்படுவதோடு, அனைவருடனும் நல்ல உறவை பேணுவார்கள் என்றாலும், சில சமயங்களில் அவர்கள் மற்றவர்களுடன் எப்படி வாழ வேண்டும் என்ற விஷயத்தில் தங்கள் வரம்புகளை மறந்துவிடுவார்கள்.
இவர்களின் இந்தப் பழக்கம் அவர்களை மிகவும் ஆபத்தானவர்களாக மாற்றுகிறது. இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் புதிய விஷயங்களைச் செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் தங்களுடன் இருப்பவர்கள் ஆதரவளிக்க வேண்டும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அது நடக்காதபோது, இவர்கள் தங்கள் நண்பர்களுக்கே ஆபத்தானவர்களாக மாறுகிறார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களும் மிகவும் ஆபத்தான இராசிகளில் ஒருவராக வைக்கப்படுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு மிக முக்கியமான விஷயம் அவர்களின் வலுவான நினைவாற்றல். கடந்த காலங்களில் மற்றவர் தங்களுக்கு செய்ததை இவர்கள் மறக்க மாட்டார்கள். அந்த விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலம், சரியான நேரத்தில் அவர்களைப் பழிவாங்குகிறார்கள்.
இருப்பினும், அவர்களிடம் இருக்கும் நல்ல குணம் என்னவெனில், நீங்கள் அவர்களை நன்றாக நடத்தினால், அவர்கள் அதை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு செய்த கெடுதலை மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள், எனவே விருச்சிக ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












