Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
இந்த ராசி பெண்களை திருமணம் செய்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமாம்.. ஏன் தெரியுமா?
ஜோதிடத்தில் எப்போதுமே 2 கிரகங்கள் திருமணம் செய்வதற்கான கிரங்களாக கருதப்படுகின்றன. அவர் குரு மற்றும் சுக்கிரன் ஆகும்.. குருவும் சுக்கிரனும் ஒருவரது ஜாதகத்தில் சரியாக அமைந்திருந்தால் சொல்லவே வேண்டாம்.. அவர்களுக்கு எல்லாமே சிறப்பாக அமையும்..
அதுவும் திருமண வாழ்க்கை ரொம்பவே அதிர்ஷ்டமாக மகிழ்சியாக இருக்கும்.. இதில் ஆண்களுக்கு திருமணத்திற்கு அதிபதி வியாழன் என்றும், பெண்களின் திருமணத்திற்கு சுக்கிரன் அதிபதி என்றும் ஜோதிடம் சொல்லுகிறது... ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவாக இருக்கிறதோ, அவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஜாதகப்படி ஒருவரின் எதிர்காலத்தை அறியலாம். அதுமட்டுமின்றி, ஜாதகத்தின் அடிப்படையில் ஒருவரின் இயல்பு, ஆளுமை ஆகியவற்றை எளிதில் அறிந்துகொள்ள முடியும். அனைத்து 12 ராசிகளிலும் சில ராசிகள் குரு பகவானாலலும் சில ராசிகள் சுக்கிரனாலும் ஆளப்படுகின்றன.. இந்த இரண்டு கிரகங்களும் திருமண காரணிகளாக கருதப்படுகின்றன.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த 3 ராசி பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தங்களின் கணவனுக்கு அதிர்ஷ்டசாலிகளாக இருபார்காள்.. கெட்ட நேரங்களிலும் தன் கணவனை அன்போடு ஆதரித்து காதலோடு வாழ்வார்களாம்.. இதனால் இவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்... அந்த 3 ராசிகள் யார்யார்? என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
ரிஷபம்
ரிஷபம் ராசிப் பெண்கள் திருமணத்திற்குப் பிறகு கணவனின் தலைவிதியையே மாற்றுகிறார்கள். இந்த ராசியின் அதிபதி சுக்கிரன் மற்றும் தாய் துர்கா தேவி ஆவார்... இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் மிகவும் அழகானவர்கள். துர்கா தேவியின் அருளால் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்களாம்.. கணவரின் அதிர்ஷ்டத்துடன், அவர்களின் திருமண வாழ்க்கையும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.. அவர்கள் வாழ்க்கையில் நீண்டகாலம்வரை அன்போடும் காதலோடும் செல்லும் என்கிறது ஜோதிடம்..
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். அவருடைய தெய்வம் சிவபெருமான். இந்த ராசி பெண்கள் இயல்பிலேயே மிகவும் அமைதியானவர்களாக இருப்பார்காளாம்.. ஆனால் அவர்களும் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறார்கள். இக்கட்டான நேரங்களிலும் கணவனுக்கு ஆதரவாக இருப்பார்கள்.. அவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் பெருமையாக மகிழ்வாக இருக்குமாம். கடக ராசி பெண்கள் பெண்களை ஜோதிடத்தில் கோஹினூர் வைரம் என்று அழைக்கிறார்கள். இந்த பெண்கள் எல்லாவற்றிலும் மிகுந்த கவனம் செலுத்துவார்கள்.
மீனம்
மீன ராசியின் அதிபதி வியாழன். அவருடைய தெய்வம் ஸ்ரீ ஹரி விஷ்ணு. இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் மத நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த பெண்கள் தங்கள் கணவர்களை மிகவும் நேசிக்கிறார்கள். அவர்களது திருமண வாழ்க்கையும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்... மாமியார்களுடனான அவர்களின் பந்தம் மற்றவர்கள் பொறாமைப்படும்படியாக இருக்கும்.. இனிமையாகவும் இருக்கும்.. இந்த பெண்களை அவர்களின் கணவர் தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என உணர்கிறார்கள். இந்த ராசி பெண்கள் தங்களின் காதலை கணவருக்கு வெளிப்படுத்தாத நாட்களே இருக்காது.. எவ்வளவு கஷ்டமான அல்லது பிஸியான நேரங்களிலும் தனது கணவரை கவனிக்காமல் இருக்க மாட்டார்கள்.. அவர்களுக்கு அன்பு தொல்லை தந்துக் கொண்டேதான் இருப்பார்களாம்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications