Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
சூரியன்-புதன் இணைந்து உருவாக்கும் புதாதித்ய ராஜயோகத்தால் சகல நன்மைகளை பெறப்போகிற 4 ராசிக்காரங்க இவங்கதான்...!
Budhaditya Raja Yoga 2025: நவகிரகங்களில் சூரியன் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறார், அதேபோல புதன் கிரகங்களின் இளவரசராக கருதப்படுகிறார். புதனும், சூரியனும் ஒரே ராசியில் வரும்போது சக்திவாய்ந்த புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. வேத ஜோதிடத்தின்படி, ஒருவரின் ஜாதகத்தில் புதன் சரியான இடத்தில் இருந்தால், நிதி சிக்கல்கள் அவர்களிடமிருந்து விலகி இருக்கும்.
அதேபோல், வேலை மற்றும் கல்வித் துறையிலும் சிறந்து விளங்க முடியும். புதனைப் போலவே, சூரியனும் ஜோதிடத்தில் ஒரு மங்களகரமான கிரகமாகக் கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் சரியான இடத்தில் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் செல்வமும், ஆற்றலும் நிலைத்திருக்கும்.

மே 7 ஆம் தேதி புதன் மேஷ ராசியில் நுழைகிறார். சூரியன் தற்போது மேஷ ராசியில் சஞ்சரித்து வருகிறார். புதனும் சூரியனும் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் போது, புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகம் 5 ராசிக்காரர்களின் துன்பத்தைப் போக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டமடையப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
புதாதித்ய ராஜயோகம் கடக ராசியின் பத்தாவது வீட்டில் உருவாகப் போகிறது. எனவே, இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் கௌரவத்தையும், புகழையும் பெறுவார்கள். இந்த யோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கு நிதி நெருக்கடிகள் வராமல் இருக்கும். மேலதிகாரிகளுடன் நெருங்கிய உறவைப் பேணுவது சாத்தியமாகும். அவர்களின் செயல்களுக்கான பலன்கள் அவர்களின் வாழ்க்கையில் முழுமையாக கிடைக்கும்.
மனக் கஷ்டங்கள் நீங்கும். கடன் பிரச்சினை தீர்ந்து வாழ்க்கையில் நிம்மதி திரும்பும். நீண்ட கால ஆசைகள் இப்போது நிறைவேறும். அவர்கள் அலுவலகத்தில் பெரிய சாதனைகளை செய்ய முடியும். இந்த காலகட்டத்தில் அவர்கள் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கையை வாழ முடிகிறது.
சிம்மம்
சிம்ம ராசியின் ஒன்பதாம் வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் வேலையில் பெரிய சாதனைகளைப் படைக்க முடியும். பல சிரமங்கள் அவர்கள் வாழ்க்கையிலிருந்து காணாமல் போக வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் துணையுடன் அவர்கள் வாழ்க்கையில் பல விஷயங்களைச் சாதிக்க முடியும். சரியான முடிவுகள் எடுப்பதால் அவர்கள் வாழ்க்கையில் பல வெற்றிகள் தேடிவரும். குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகள் தேடிவரும். அவர்கள் வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தை அடைய முடியும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களின் ஏழாவது வீட்டில் ராஜயோகம் உருவாகிறது. இந்த காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ முடியும். உங்கள் துணையுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். இழந்த மூதாதையர் சொத்துக்களை மீண்டும் பெற முடியும். கடன் பிரச்சினைகளைக் தீர்க்க முடியும். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல சாதனைகளை அடைய முடியும். தொழிலில் முன்னேற உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் துறையில் வளர புதிய வாய்ப்புகள் வரும்.
தனுசு
தனுசு ராசியின் ஐந்தாம் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகப் போகிறது. எனவே வீடு, கல்வி மற்றும் வணிகத் துறைகளில் அவர்கள் பெரும் லாபத்தை அடைய முடியும். அவர்கள் பெயரையும் புகழையும் அடைய முடிகிறது. அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் தேடிவரும். எதிரிகள் நண்பர்களாக மாற வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும். திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு தகுந்த வரன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












