2025-ல் இருமுறை ஒன்றிணையும் சனி மற்றும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியும்..

Saturn Venus Conjunction Will Occur Twice In 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி, மற்ற கிரகங்களுடன் இணைந்து, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். அதேப் போல் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இவ்விரு கிரகங்களும் நட்பு கிரகங்களாகும்.

இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றிணையும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். முக்கியமாக இந்த கிரகங்களின் சேர்க்கை சற்று சிறப்பானது. இப்படிப்பட்ட இந்த கிரகங்களின் சேர்க்கை 2025 ஆம் ஆண்டில் 2 முறை நிகழவுள்ளது. அதில் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் கும்ப ராசியில் சனி மற்றும் சுக்கிரன் ஒன்றிணைந்து பயணிக்கத் தொடங்கி, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஒன்றாக இருந்தனர்.

Saturn Venus Conjunction Will Occur Twice In 2025 These Zodiac Signs Will Be Lucky

அதன் பின் 2025 மார்ச் மாதத்தில் சனி சுக்கிரனின் சேர்க்கை மீன ராசியில் நிகழவுள்ளது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணப்போகிறார்கள். இப்போது 2025-ல் இருமுறை நிகழும் சனி சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கையானது எதிர்பாராத நிதி ஆதாயங்களைத் தரும். வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சனி மற்றும சுக்கிரனின் சேர்க்கையால் தைரியம் அதிகரிக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். எதிரிகளை வெற்றி காண்பீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் இந்த சேர்க்கையால் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசித்து, நல்ல மாற்றத்தைக் காண்பார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, January 5, 2025, 23:29 [IST]
Desktop Bottom Promotion