Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் சனிபகவான் மிகவும் சக்திவாய்ந்த அதேசமயம் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக அறியப்படுகிறார். அதனால்தான் சனிபகவானின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் தீவிரமானதாகவும், நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. இது அனைத்து ராசிகளையும் பாதித்தாலும், அதன் விளைவுகள் ராசியைப் பொறுத்து மாறுபடக்கூடும், சிலருக்கு இது நற்பலன்களையும், மற்றவர்களுக்குச் சவால்களையும் இது கொண்டுவரும்.

சனிப் பெயர்ச்சி, நட்சத்திர மாற்றம், வக்ர பெயர்ச்சி மற்றும் சனி அஷ்டமி போன்ற முக்கிய நிகழ்வுகள் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. ஜூலை 27 அன்று, சனிபகவான் மீன ராசியில் வக்ர நிலைக்கு மாற உள்ளார். சனிபகவான் இதே நிலையில் சுமார் 138 நாட்களுக்கு நீடிக்கப் போகிறார். சனிபகவானின் இந்த கிரக மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் சிரமங்களைச் சந்திக்கப் போகிறார்கள், அதேசமயம் சில ராசிக்காரர்கள் சாதகமான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கும்பம்
கும்ப ராசியின் இரண்டாம் வீட்டில் சனி வக்ர நிலையில் சஞ்சரிப்பதால், அவர்கள் பொருளாதாரரீதியாக பல முன்னேற்றங்களை சந்திக்கப் போகிறார்கள். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் இறுதியாக நிறைவுபெறலாம். இந்த காலகட்டத்தில் அவர்களின் தொழில் வளர்ச்சி நம்பிக்கைக்குரியதாக இருக்கும். இதனால் தங்கள் வாழ்வின் பல்வேறு அம்சங்களில் வெற்றி பெறுகிறார்கள். பணியில் இருப்பவர்கள் தங்கள் அனைத்து வேலைகளிலும் வெற்றியை எதிர்பார்க்கலாம் மற்றும் அவர்கள் திருப்தியுடன் இருப்பார்கள்.
அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் மற்றும் அவர்களின் நிதி நிலைமை மிகவும் நன்றாக இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் கும்ப ராசிக்காரர்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அவர்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கும். மொத்தத்தில் இந்த காலகட்டம் அவர்களுக்கு நினைத்தது பலிக்கும் நேரமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் ஆறாம் வீட்டில் சனிபகவானின் இருப்பு, அவர்களை முன்னேறவிடாமல் தடுத்துவந்த தடைகளை நீக்க உதவக்கூடும். ஒரு புதிய தொழிலைத் தொடங்கவும், பணியிடத்தில் நிலவி வந்த சிக்கல்களைத் தீர்க்கவும், புதிய வருவாய் வாய்ப்புகளை உருவாக்கவும் இது ஒரு சிறந்த நேரமாக அமையலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள், மேலும் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். அவர்களின் வருமான ஆதாரங்கள் அதிகரித்து அனைத்து வகையான பொருள் இன்பங்களையும் எதிர்பார்க்கலாம். இது அவர்களின் வாழ்க்கையை மிகவும் எளிமையாக்கும்.
பணியில் இருப்பவர்கள் உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பதுடன் சம்பள உயர்வுக்கான வாய்ப்பையும் பெறலாம். இந்த காலகட்டத்தில் சுற்றுலா செல்ல நேரிடலாம். மகர ராசிக்காரர்களுக்கு அவர்களின் பயணங்கள் நல்ல பலனைத் தரும். இந்த காலகட்டத்தில் பணத்தை சேமிப்பதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் ஐந்தாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால், அவர்கள் வாழ்க்கையில் பல சிறப்பான மாற்றங்கள் நடைபெறப்போகிறது. இந்த காலகட்டம் புதிய வேலைவாய்ப்புகளுக்கான வாசல்களையும் திறந்துவிட்டு, தனிப்பட்ட உறவுகளில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டுவரக்கூடும். இந்த காலகட்டத்தில் அவர்கள் வருமானத்தில் அசாதாரண வளர்ச்சியைப் பெறுவார்கள். அவர்களின் பொருளாதார நிலை மேம்படும். வியாபாரம் செய்பவர்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காணலாம்.
வேலையிடத்தில் உங்களின் பொறுப்புகளும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக காத்திருந்த பதவி உயருவு உங்களைத் தேடிவரும். விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இந்த காலகட்டத்தில் மற்றவர்களுடன் தங்கள் உறவை மேம்படுத்துவார்கள். இது அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும். பணியில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் நல்ல உறவை உருவாக்க முடியும். முதலீடுகள் மூலம் லாபம் தேட வேண்டிய நேரம் இது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
