30 ஆண்டுகளுக்கு பின் சனி, குருவின் அரிய நிலை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுது...

Rare Position Of Saturn Jupiter After 30 Years: ஜோதிடத்தில் மிகவும் சக்தி வாய்ந்த இரண்டு கிரகங்கள் என்றால் அது சனி மற்றும் குரு. இவ்விரு கிரகங்களும் ஒரு ராசியில் நீண்ட காலம் இருப்பதால், இவ்விரு கிரகங்களின் நிலை மற்றும் அவற்றின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

இதில் சனி ஒரு ராசியில் 2 1/2 ஆண்டு காலமும், குரு ஒரு ராசியில் 1 ஆண்டு காலமும் இருப்பர். தற்போது சனி பகவான் குரு பகவானின் மீன ராசியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்து பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் உள்ளார். அதே வேளையில் குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இதனால் குரு மற்றும் சனி ஒருவருக்கொருவர் 108 டிகிரியில் இருந்து, மனித வாழ்க்கையில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Rare Position Of Saturn Jupiter After 30 Years List Of Lucky Zodiac Signs

அதுவும் இந்த கிரகங்களின் சிறப்பான நிலைகளால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிப்பதோடு, சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அதோடு செல்வத்தில் அபரிமிதமான உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது சனி குருவின் நிலையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு சனியின் அரிய நிலையால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பேச்சால் பல வேலைகளை முடிப்பீர்கள்.

பணியிடத்தில் உங்களின் நடத்தை உயர் அதிகாரிகளால் ஈர்க்கப்படும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மேம்படும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலைமை வலுவடையும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி-குருவின் நிலையால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சனி-குருவின் நிலையால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு முடிவடையும். வாழ்க்கையில் நடக்கும் பல பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஏற்கனவே சிரமப்பட்டு வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது மரியாதை கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். குழந்தைகளுடனான உறவு வலுபெறும். முக்கியமாக இக்காலத்தில் பல நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, September 2, 2025, 23:50 [IST]
Desktop Bottom Promotion