சனி புதனின் அரிய சேர்க்கை: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...

Pratiyuti Drishti 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் சேர்ந்தோ அல்லது எதிர் இணைப்புக்களினாலோ மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் கிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். சுமார் 30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் சனி பகவான் பயணித்து வருகிறார்.

அதே சமயம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் மற்றும் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுபவர் புதன். இந்த புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 17 ஆம் தேதி புதனும், சனி பகவானும் ஒருவருக்கொருவர் 180 டிகிரியில் எதிரெதிரில் வந்து பிரதியுதி திருஷ்டி யோகத்தை உருவாக்கவுள்ளனர். இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

Mercury Saturn Create Pratiyuti Drishti 2025 List Of Lucky Zodiac Signs

இருப்பினும் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். இப்போது சனி, புதனால் உருவாகும் பிரதியுதி திருஷ்டியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சனி புதனால் உருவாகும் பிரதியுதி திருஷ்டியால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி புதனால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி சிறப்பான பலன்களைத் தரும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பம் மற்றுல் தொழில் வாழ்க்கை திருப்தியாக இருக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சனி புதனால் உருவாகும் பிரதியுதி திருஷ்டியால் வருமானத்தில் பெரிய அளவில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் நன்மைகளைப் பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் பரம்பரை சொத்துக்களால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, September 16, 2025, 9:57 [IST]
Desktop Bottom Promotion