Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
குருபகவான் மிதுன ராசிக்கு செல்வதால் இந்த 4 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோடீஸ்வர யோகம் வரப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் வியாழன் மிகவும் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறது. வியாழன் என்பது அறிவு, ஞானம், அதிர்ஷ்டம், தர்மம், குழந்தைகள் மற்றும் செல்வத்துடன் தொடர்புடைய ஒரு கிரகமாகும். எனவே குருபகவானின் இயக்கத்தில் ஏற்படும் சின்ன சின்ன மாற்றங்கள் கூட அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது, 2025 ஆம் ஆண்டு வியாழன் பெயர்ச்சி மே மாதத்தில் நடைபெற உள்ளது. மே 15 ஆம் தேதி, குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடம் மாறுகிறார். மிதுன ராசியில் குருவின் பிரவேசம், 4 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை அளிக்கப்போகிறது. இந்த பதிவில் எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் குருபெயர்ச்சியால் கோடீஸ்வரராகப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிருகசீரிஷம்
குருவின் ராசி மாற்றத்தால் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல நன்மைகளை அடையப்போகிறார்கள். அவர்கள் வியாபாரத்தில் பெரிய ஆதாயங்களைப் பெறுவார்கள். தொழில் தொடங்க விரும்புவோருக்கு புதிய வாய்ப்புகள் திறக்கப்படும். அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். அவர்களின் வாழ்க்கையில் நிலவி வந்த பணக்கஷ்டம் முடிவுக்கு வரும்.
வேலை தேடுபவர்களுக்குப் பொருத்தமான வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு பொருத்தமான வாய்ப்புக் கிடைக்கும். நிதி நன்மைகளுடன் ஒரு புதிய வேலையில் சேர வாய்ப்பு உள்ளது. அவர்கள் பணம் சம்பாதிப்பதற்கு பல்வேறு வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். மாணவர்கள் பெரிய வெற்றிகளையும், சாதனைகளையும் அடையலாம்.
பூசம்
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குருபெயர்ச்சி அற்புதமான மாற்றங்களை அளிக்கப்போகிறது. அவர்களின் பொருளாதார சிக்கல்கள் முடிவுக்கு வரப்போகிறது. வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகளுக்கான வாய்ப்புகள் தேடிவரும். அவர்களின் திட்டங்கள் அனைத்தும் சரியாக நிறைவேறுவதால் அவர்கள் வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். இதனால் அவர்களின் மனஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
வேலையில் சாதனைகளும், அதிர்ஷ்டமும் நிறைந்திருக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட பெரிய லாபத்தை பெற முடியும், இது அவர்களின் சேமிப்பை அதிகரிக்கும். அவர்கள் மகன்.மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம்.
அனுஷம்
இந்த குருபெயர்ச்சியால் அவர்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்க முடியும். அதிர்ஷ்டம் அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் துணை நிற்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபாரத்தில் வளர ஒரு கூட்டணியை உருவாக்குவார்கள். இதனால் அவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் மகத்தான வெற்றியைப் பெறலாம்.
அவர்கள் குடும்பத்தில் அமைதி நிலவும், மேலும் துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும். இந்த காலகட்டத்தில் அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கிறது மற்றும் வருமானம் அதிகரிக்கும். அவர்களின் சமூக உறவு வலுவடையும், மேலும் குறுகிய அல்லது நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. அரசாங்க வேலைகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இப்போது அதில் ஒருபடி முன்னேறுவார்கள்.
திருவோணம்
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குருபெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் உயர் பதவிகளை அடைய முடியும், மேலும் அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு நேர்மறையான மாற்றங்கள் ஏற்படலாம். அவர்களின் அனைத்து முயற்சிகளும் அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும்.
அவர்களின் தொழில் வாழ்க்கை நிலையானதாக இருக்கும், மேலும் சமூகத்தில் நல்ல பெயரைப் பெற முடியும். பொருளாதார நிலை மேம்படும், மேலும் அவர்கள் பெரிய அளவில் சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












