Latest Updates
-
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
ஒரே நாளில் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விடுதலை அளிக்கும் அற்புத கை மருந்து!
உங்களுக்கு அடிக்கடி சளி, இருமல் பிடிக்கிறதா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அற்புத கை மருந்தை தினமும் மூன்று முறை சாப்பிடுங்கள். இதனால் ஒரே நாளில் சளி, காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.
தற்போது பலரும் சளி மற்றும் காய்ச்சலால் அடிக்கடி அவஸ்தைப்படுவார்கள். இப்படி ஒருவருக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது, பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி தான். ஆரம்பதிலேயே இதற்கு சரியான மருந்துகளை எடுத்து வந்தால், அடிக்கடி அவஸ்தைப்படுவதைத் தவிர்க்கலாம்.

இங்கு பலவீனமாக இருக்கும் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, அடிக்கடி காய்ச்சல், சளி பிடிக்கும் தொல்லையில் இருந்து விடுபட உதவும் ஓர் அற்புத மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தானது பல மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

வெங்காயம்
வெங்காயத்தில் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளது மற்றும் இது வீரியம் மிக்க நிலைமைகளை சரிசெய்யும். மேலும் இது சுவாச மண்டலத்தில் ஏற்படும் பல்வேறு வகையான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

தேன்
தேனில் பூஞ்சை எதிர்ப்பு, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் பண்புகள் உள்ளன மற்றும் இது தொண்டையில் உள்ள தொற்றுக்களையும் சரிசெய்யும்.

எலுமிச்சை
எலுமிச்சையில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராடும். இரும்புச்சத்து மிகவும் இன்றியமையாத சத்து. எலுமிச்சை உண்ணும் உணவுகளில் உள்ள இரும்புச்சத்தை அதிகமாக உறிஞ்சச் செய்யும்.

தேவையான பொருட்கள்:
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1
வெங்காயம் - 1
தண்ணீர் - 2 கப்

தயாரிக்கும் முறை:
முதலில் நீரை கொதிக்க வைத்து, பின் அதில் வெங்காயத்தை துண்டுகளாக்கி சேர்த்து, 15 நிமிடம் வேக வைத்து இறக்கி, 10 நிமிடம் குளிர வைக்க வேண்டும். பின் அதனை வடிகட்டி, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, உடனே பருக வேண்டும்.

குறிப்பு
இந்த பானத்தை தினமும் மூன்று முறை குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப்படுத்தப்பட்டு, உடனே சளி மற்றும் காய்ச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications











