Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..
தீராத முதுகு வலியா? தசைப் பிடிப்பா? இதை ட்ரைப் பண்ணுங்க
சில சமயங்களில் வேலை அளவுக்கு அதிகமாக இருக்கும்போது, அல்லது தவறான முறைகளில் அமரும்போது, தூங்கும் போது, முதுகு வலி, தசை பிடிப்பு வரும். இவற்றால் சில சமயங்களில் தூக்கம் பாதிக்கும்.

நார்மலாக இருக்க முடியாது. இதற்கு பாராசிடமாலை தேடிப் போக வேண்டாம். இயற்கையான முறையில் இந்த மாதிரி வலிகளை குணப்படுத்தலாம்.
வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு வலி நிவாரணியை நாமே செய்யலாம். இது ஆர்த்ரைடிஸ் வலி, உடல் வலி, தசை பிடிப்பு, என எல்லாவற்றிற்கும் நிவாரணம் தரும்.
அதற்கு செய்யத் தேவையானவை என்னெவென்று பார்ப்போம்
தேவையானவை :
தேங்காய் எண்ணெய் -அரை கப்
கோகோ பட்டர்- 1 கப்
புதினா எண்ணெய் -15 துளிகள்
கிராம்பு எண்ணெய் -8 துளிகள்
யூகளிப்டஸ் எண்ணெய் -15 துளிகள் உடல்
சோளமாவு -1 டீ ஸ்பூன்
இஞ்சித் தூள் -1 டீ ஸ்பூன்
மேலே கூறியயவற்றை ஒன்றாக கலக்கி, ஒரு பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும். இதன் செய்முறை எளிது. கெட்டு போகாது. நிறைய நாட்களுக்கு வரும்.
இந்த எண்ணெயை வலியுள்ள இடத்தில் பூசி, இதமாய் மசாஜ் செய்யவும். சில நிமிடங்களிலேயே வலி பறந்துவிடும்.
புதினா, யூகளிப்டஸ், கிராம்பு எண்ணெய், நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தை தளர்த்து, புத்துணர்ச்சியை தருகிறது. தேங்காய் எண்ணெய் கோகோ பட்டர், எலும்புகளை பலப்படுத்தி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
கிராம்பு எண்ணெயில் வலியை மரக்கச் செய்யும் குணம் இருக்கிறது. இந்த எண்ணெய் வலி இருக்கும் இடங்களில் செயல்படுகிறது.
இஞ்சி உடலில் ஏற்படும் வீக்கத்தை கட்டுபடுத்தி, வலியினை குறைக்கிறது. சோள மாவு இதில் சேர்ப்பதற்கு காரணம், இந்த எண்ணெய்கள் சருமத்தில் எண்ணெய் பசையை அதிகப்படுத்து. இந்த மாவு அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிக் கொள்கிறது.
இந்த எண்ணெய் எலும்புகளுக்கு பலம் அளித்து, தசைகளுக்கு புத்துணர்வு தருகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் வலி குறைந்து புத்துணர்வோடு இருப்பீர்கள். முயற்சி செய்து பாருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



