Latest Updates
-
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும்
இந்த கம்பெனி அவங்க பணியாளர்களுக்கு டேட்டிங் செல்ல சம்பளத்தோடு லீவ் கொடுத்து அனுப்பி வைக்குதாம்..எங்க தெரியுமா?
பெரும்பாலான வேலை செய்யும் நபர்கள் தங்கள் எளிதில் வேலைப்பளுவால் டேட்டிங் செல்லவோ அல்லது காதலிக்கவோ நேரம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். வேலையும், நேரமின்மையும் காதலின் மிகப்பெரிய எதிரிகளாக உள்ளது.நாம் வாழும் உலகம் ஆக்சிஜன் மட்டுமல்ல காதலாலும் நிறைந்துள்ளது.
மேலும் சமீபத்தில் ஒரு நிறுவனம் இந்த பழமொழியை சற்று சீரியஸாக எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. அவர்கள் வேலை நேரத்தில் தங்கள் அலுவலகப் பணியாளர்கள் டேட்டிங்கில் வெளியே செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அதுமட்டுமல்ல, அதற்கு அவர்கள் சம்பளமும் கொடுக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்த அறிக்கைகளின் படி, வைட்லைன் குரூப் என்ற தாய்லாந்து மார்க்கெட்டிங் ஏஜென்சி தனது ஊழியர்களை அலுவலக நேரத்தில் வெளியே செல்லவும், அவர்கள் விரும்பும் நபர்களுடன் டேட்டிங் செய்யவும் மற்றும் மகிழ்ச்சியான உறவுகளை வைத்திருக்கவும் ஊக்குவிக்கிறது. இது மிகவும் வினோதமான மற்றும் பாராட்டத்தக்க செயலாகக் கருதப்படுகிறது.

காரணம் என்ன?
பல ஆராய்ச்சியாளர்கள் காதலில் அல்லது உறவில் இருப்பவர்கள் பெரும்பாலும் இல்லாதவர்களை விட மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார்கள். அந்தளவுக்கு அவர்களும் தங்கள் வேலையை ரசிக்கிறார்கள். எனவே தங்கள் ஊழியர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், தாய்லாந்து நிறுவனம் இந்த விசித்திரமான கொள்கையை கொண்டு வந்துள்ளது.
இந்த நிறுவனம், பணியிடத்தில் அவர்களின் உற்பத்தித்திறன் மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக அவர்களது பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 'டிண்டர் லீவ்'களை வழங்குகிறது. அவர்கள் அலுவலகத்தில் ஏறக்குறைய 200 பணியாளர்கள் உள்ளனர், மேலும் பல அறிக்கைகளின்படி, ஜூலை முதல் டிசம்பர் 2024 இறுதி வரை (ஆறு மாதங்களுக்கு) 'டிண்டர் லீவ்' எடுத்து மகிழலாம். இது மட்டுமின்றி, நிறுவனம் தங்களின் ஊழியர்களின் டிண்டர் கோல்டு மற்றும் டிண்டர் பிளாட்டினத்திற்கான சந்தாக்களையும் செலுத்துவதன் மூலம் அவர்களுக்குத் தகுந்த துணையைக் கண்டறிய உதவும்.
தங்கள் ஊழியர்கள் எத்தனை 'டிண்டர் லீவ்'களை எடுக்கலாம் என்பதை அவர்கள் மேற்கோள் காட்டவில்லை என்றாலும், ஊழியர்கள் டேட்டிங்கில் வெளியே செல்ல சில நாட்கள் மற்றும் இரவுகளை எடுத்துக் கொள்ளலாம். பணியாளர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும்.
அவர்களின் பெண் ஊழியர் ஒருவர் வேலைப்பளுவால் ரொமான்டிக் டேட்டிங்கில் வெளியே செல்ல மிகவும் பிஸியாக இருப்பதாக புகார் கூறியதை அடுத்து, நிறுவனம் இந்த புரட்சிகர யோசனையை கொண்டு வந்தது.
இதனை இந்த நிறுவனம் தங்கள் அதிகாரப்பூர்வ LinkedIn சுயவிவரத்திலும் பகிர்ந்துள்ளது. அவர்களின் பதிவில், "நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு இலவச டிண்டர் பிளாட்டினம் & டிண்டர் கோல்டு மெம்பர்ஷிப்பை வழங்குகிறோம். எங்கள் ஊழியர்கள் யாரோ ஒருவருடன் டேட்டிங் செய்ய டிண்டர் லீவை பயன்படுத்திக் கொள்ளலாம்."
மறுபுறம், கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு முழு நேரமும் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பதில் பிடிவாதமாக இருக்கும் நிறுவனங்களையும், முதலாளிகளையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம், ஏனெனில் இது நிறுவனத்தின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்று சில முதலாளிகள் நினைக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications












