Just In
- just now கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 43 min ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 2 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
Don't Miss
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெண்களே! உங்க கணவர் 'இந்த' மாதிரி நடந்துகிட்டா... அவர் விரைவில் உங்கள விட்டு பிரிஞ்சி போயிடுவாராம்!
உங்கள் ஆழ் மனம் உங்கள் எதிர்கால வாழ்க்கையில் உங்கள் மனைவியைப் பார்க்கவில்லை என்றால், நீங்கள் இனி திருமண உறவில் ஈடுபடவில்லை என்பதற்கான பெரிய அறிகுறியாகும்.
ஆண், பெண் உறவு பல சிக்கல்கள் மற்றும் மகிழ்ச்சிகள் நிறைந்தது. அந்த உறவு சிக்கலானதாக மாறுவதும், மகிழ்ச்சியாக மாறுவதும் தம்பதிகள் இருவரின் கையிலும்தான் உள்ளது. பொதுவாக உறவு என்றாலே, புரிந்துகொள்வதும், விட்டுக்கொடுப்பதும், நம்பிக்கையாய் இருப்பதும், அன்பு காட்டுவதும் ஆகும். இவ்வாறு தம்பதிகள் உறவில் இருந்தால், அவை நீண்ட காலத்திற்கு மகிழ்ச்சியாய் நீடிக்கும். பொதுவாக சிக்கல்களும் எல்லா உறவுகளிலும் ஏற்படும், அதை கையாளும் விதம்தான் மிக முக்கியம். திருமண உறவில் மிகவும் சாதாரணமான சண்டைகள், வாக்குவாதங்கள் மற்றும் தாழ்வு தருணங்கள் ஏற்படுவது அதிகம்.
விருப்பமில்லாத உறவில் யாராலும் இருக்க முடியாது. அது மற்ற உறவுகளுக்கு அதிக பிரச்சனை இல்லை. ஆனால், கணவன் மனைவி உறவில் இவ்வாறு இருப்பது இருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பாதிக்கும். சில செயல்கள் மற்றும் வார்த்தைகள், அவர்கள் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும், திருமணம் இனி வேலை செய்யாது என்பதைக் குறிக்கிறது. விரும்பமில்லாமல் அல்லது திருமண உறவை முறிக்க விருப்பும் ஆண்களை கண்டுபிடிக்க உதவும் வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
ஒரு தனி மனிதனைப் போல வாழ வேண்டும்
உங்களுக்கு திருமணமாகியுள்ளது என்பதை உணரவில்லை என்றால், ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. ஆண்களே, திருமணங்கள் அனைத்தும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதும், புரிந்துகொள்வதும் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அல்லது உங்கள் பங்குதாரர் உண்மையில் பொறுப்புகளை பகிர்ந்துகொண்டு செயல்படவில்லை என்றால், பிறகு திருமணம் நடந்து என்ன பயன்? இந்த உறவு இறுதி வரை நீடிக்காது.
எதிர்கால முடிவுகள்
உங்கள் ஆழ் மனம் உங்கள் எதிர்கால வாழ்க்கையில் உங்கள் மனைவியைப் பார்க்கவில்லை என்றால், நீங்கள் இனி திருமண உறவில் ஈடுபடவில்லை என்பதற்கான பெரிய அறிகுறியாகும். மேலும் திருமணங்கள் என்பது உங்கள் துணையுடன் சேர்ந்து வாழ்வது மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதும் ஆகும். உங்கள் கூட்டாளருடன் சேர்ந்து உங்கள் கனவுகள் மற்றும் லட்சியங்களை அடைவது போன்ற விஷயங்களால், உங்களை உற்சாகப்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், நீங்கள் கவலைப்பட வேண்டிய ஒன்று உள்ளது.
துரோக எண்ணங்கள்
வேறொருவருடன் உங்கள் துணையைப் பற்றி நினைக்கும் போது நீங்கள் வெறுப்பாகவோ, கோபமாகவோ உணரவில்லை என்றால், இது உங்கள் உறவுக்கான ஒரு பெரிய சிவப்புக் கொடி. உங்கள் துணையிடம் அதே உணர்வுகளை இனி நீங்கள் கொண்டிருக்க மாட்டீர்கள் என்பதே இதன் பொருள். உங்கள் பங்குதாரர் வேறொருவருடன் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூட நீங்கள் கருதலாம். உங்கள் மீதான ஈர்ப்பு குறைந்து, வோறொருவர் மீதான ஈர்ப்பினால் கூட அப்படி நடக்கலாம்.
சுதந்திரமான நிதி
முக்கிய நிதி முடிவுகளை எடுக்கும்போது, உங்கள் துணையை ஈடுபடுத்துவது அவசியம். ஆனால் அந்த எண்ணம் உங்களைத் தொந்தரவு செய்து, உங்கள் நிதியைப் பற்றி உங்கள் கூட்டாளரிடம் கூறுவதைத் தடுத்து நிறுத்தினால், நீங்கள் அவர்களுடன் இனி இருக்க விரும்பவில்லை. பிரிவினை மற்றும் விவாகரத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்று நிதிநிலை சிக்கல்கள். பெரும்பாலான தம்பதிகளுக்குள் பிரச்சனை எழுவதும் இந்த நிதி சிக்கலாள்தான்.
முக்கிய சிக்கல்களை சரிசெய்தல்
உங்கள் திருமணத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களை சரிசெய்ய முயற்சி செய்வதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால், அந்த திருமண உறவு இனி நீடிக்காது. திருமணத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு, தொடர்ந்து ஏற்ற தாழ்வுகள் இருப்பதால், பைத்தியக்காரத்தனமான முயற்சி தேவைப்படுகிறது.